என்னை சுற்றி உங்கள் சிந்தனைகள்
எதற்கு வீணாம் தருவீர் நிந்தனைகள்
தன்னைத் தானே இவ்வுலகம் தினம்
தட்டா மாலையாய் சுற்றல் போல்
அன்னை வயிற்றில் அவதறித்து இந்த
அவனியில் உதித்த இன்று வரை
சொன்னதை ஏதும் செய்தேனா நானும்
சுற்றம் உலகென நாளும் வந்தேனா
வையம் தன்னில வாழ்வாங்கு வாழ
வகுத்த வள்ளுவன் குறள் ஓங்க
செய்யும் செயலில் கொண்டேனா நான்
செய்வது தவறெனக் கண்டேனா
பொய்யும் புரட்டும் உலகெங்கும்
போகிற வழியில் நானெங்கும்
பையில் பணமே உள்ளவரை நடந்த
பாதையைச் சொன்னால் நிந்தனைகள்
பெரிதாய் என்ன சாதித்தேன் செய்த
பிழையைச் சொன்னால் நிந்தித்தேன்
அரிதாய் ஏதே இரண்டொன்றே நானும்
ஆற்றிய துண்டா அறியேனே
உரிதா ஏதும் இல்லையென நீர்
உணர்வீர் தெளிவீர் எனவே தான்
தெரியாத் தனமாய் எனைச் சுற்றி வீணாக
எதற்கு வேண்டும் உங்கள் சிந்தனைகள்
புலவர் சா இராமாநுசம்
எதற்கு வீணாம் தருவீர் நிந்தனைகள்
தன்னைத் தானே இவ்வுலகம் தினம்
தட்டா மாலையாய் சுற்றல் போல்
அன்னை வயிற்றில் அவதறித்து இந்த
அவனியில் உதித்த இன்று வரை
சொன்னதை ஏதும் செய்தேனா நானும்
சுற்றம் உலகென நாளும் வந்தேனா
வையம் தன்னில வாழ்வாங்கு வாழ
வகுத்த வள்ளுவன் குறள் ஓங்க
செய்யும் செயலில் கொண்டேனா நான்
செய்வது தவறெனக் கண்டேனா
பொய்யும் புரட்டும் உலகெங்கும்
போகிற வழியில் நானெங்கும்
பையில் பணமே உள்ளவரை நடந்த
பாதையைச் சொன்னால் நிந்தனைகள்
பெரிதாய் என்ன சாதித்தேன் செய்த
பிழையைச் சொன்னால் நிந்தித்தேன்
அரிதாய் ஏதே இரண்டொன்றே நானும்
ஆற்றிய துண்டா அறியேனே
உரிதா ஏதும் இல்லையென நீர்
உணர்வீர் தெளிவீர் எனவே தான்
தெரியாத் தனமாய் எனைச் சுற்றி வீணாக
எதற்கு வேண்டும் உங்கள் சிந்தனைகள்
புலவர் சா இராமாநுசம்
| Tweet |

