Saturday, November 8, 2014

என், முகநூலில் வந்தவை ! வலையில் படிக்கத் தந்தவை !





வாள்முனைப் பெரிது என்றான் நெப்போ லியன்
பேனாமுனைப் பெரிது என்றான் வால்டேர்
அறிவு முனைப் பெரிது என்றார் பெர்னாட்சா
ஒழுக்கமே பெரிது என்றார் திருவள்ளுவர்
ஒழுக்கமில்லாத்தவன் கையில் உள்ள வாளும்
பேனாவும் அவனது அறிவும் பயனற்றதாகும்!

சிரியுங்கள் அது நெஞ்சின் இசை
சிந்தியுங்கள் அது ஆற்றலின் ஊற்று
படியுங்கள் அது அறிவின் வளர்ச்சி
உழையுங்கள் அது வெற்றியின் இரகசியம்
விளையாடுங்கள் அது இளமையின் கொடை!

கல்லில் உயிர் உறங்குகிறது
தாவரத்தில் உயிர் அசைகிறது
விலங்குகளில் உயிர் வெளிப்படுகிறது
மனிதனிடம் உயிர் வேலை செய்கிறது
மகானிடம் உயிர் பணி செய்கிறது

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, November 4, 2014

பிழையன்றோ ? ஆள்வோரே எண்ணி பாரீர்- ஏழைப் பேதையராம் அன்னவரை காக்க வாரீர்!



ஏதேதோ  நடக்குது  நாட்டுனிலே –முழுதும்
   எழுதிட  முடியுமா  பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ  தெரியாது  வாழுகின்றோம்-போகும்
   திசைகாணா துயர்தன்னில்  வீழுகின்றோம்-மேலும்
போதாது விலைவாசி  விண்ணைமுட்ட –தினம்
   புலம்பிட  மக்களும்  கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட  இயலவில்லை-ஏதோ
   உள்ளத்தை  வருத்திட வந்ததொல்லை


பகல்கொள்ளை  படுகொலை  பெருகிப் போச்சே-நாளும்
    பயத்துடன்  வாழ்கின்ற  நிலையு மாச்சே!-வேறு,
புகலென்ன ! வழியின்றி!  வருந்த லாச்சே-நாடும்
     போவதென்ன  காடாக!  மாற லாச்சே!-மேலும்
மழைவெள்ளம்! இட்டபயிர் அழிந்து போக-கண்டே
    மனம்குமுறும்  விவசாயி நொந்து சாக!-நீதியில்,
பிழையன்றோ ? ஆள்வோரே  எண்ணி பாரீர்- ஏழைப்
    பேதையராம் அன்னவரை காக்க  வாரீர்!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...