Sunday, December 11, 2016

வரண்டன குடிநீரை வழங்கும் ஏரி –எதிரே வருங்காலம் பஞ்சத்தால் எல்லை மீறி



நாளை கூடும் அமைச்சர்கள் கவனத்திற்கு
-----------------------------------------------------
வரண்டன குடிநீரை வழங்கும் ஏரி –எதிரே
வருங்காலம் பஞ்சத்தால் எல்லை மீறி
திரண்டிட குடத்தோடு தெருவில் எங்கும்=மக்கள்
திரிகின்ற நிலைவருமா இங்கும் அங்கும்
உருண்டன! மழைக்காலம் போகும் முன்னே- அரசு
உருப்படியாய் திட்டமிடல் நன்றாம்! பின்னே
மருண்டிடும் மானாக திண்டாடிப் போவீர்-உடனே
மறவாது செயல்பட்டு மக்களைக் காவீர்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...