Friday, January 2, 2015

முன்காணா மணிலாவைக் கண்டே வந்தேன்!


முன்காணா மணிலாவைக் கண்டே வந்தேன்-நாளும்
முன்னேற மக்களவர் முயற்சி, செந்தேன்!
தன்பணி என்னவென அறிந்துக் கொண்டே- அவர்
தவறின்றி உழைக்கின்ற அழகுக் கண்டே!
என்பணி விரிவாக எழுத வேண்டும்- ஆனால்
இயலாமை! முதுமை !முடக்க ஈண்டும்!
பின்பதனை முடிந்தவரை எழுது கின்றேன் –சிலநாள்
பொறுத்திடுவீர்! உறவுகளே தொழுது நின்றேன்!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...