Wednesday, January 6, 2016

நாளும் கைதே ஆகின்றான் –மீனவன் நடப்பது எதுவும் புரியவில்லை!


நாளும் கைதே ஆகின்றான் –மீனவன்
நடப்பது எதுவும் புரியவில்லை
ஆளும் அரசோ தவறாமல்-கடிதம்
அனுப்புதல் ஏனோ தெரியவில்லை

மத்தியில் ஆள்வோர் இதுபற்றி-சற்றும்
மதிப்பதாய் எதுவும் தெரியவில்லை
கத்திமேல் நடக்கிறான் மீனவனோ-அவன்
கண்ணீர் நிற்குமா புரியவில்லை

புலவர் சா இராமாநுசம்

Monday, January 4, 2016

முகநூல் பதிவுகள்





பெண்களுக்கென்று தனியாக மதுக்கடை திறக்கப் பட்டது இந்தியத் தலைநகர் டெல்லில்- செய்தி
காந்தியார் கண்டகனவு, சுதந்திரம் , பெண்ணுரிமை ஆகா!! மலர்ந்தது ! வாழ்க அகண்ட பாரதம்! பாரத மாதாவுக்கு ஜே ! பெண்ணடிமை ஒழிந்தது!

பொதுவாக சக்கரை என்பது இனிக்கும் என்றாலும் கூட அதிலேயும் வேறுபாடு உண்டு சில இனிப்பு குறைந்தும் சில இனிப்பக் கூடியும் இருக்குமல்லவா அதுபோல, வாழ்வில் நல்ல மனிதர்கள் என்று கருதப்படும் சிலரின் செயல் பாடுகளிலும் அவ்வப்போது சிறு சிறு வேறுபாடுகள் காணத்தான் செய்யும் அதையெல்லாம் பொருட் படுத்தக் கூடாது!

தனுஷ் பட கட்டவுட்டுக்கி 100 லிட்டர் பால் அபிஷேகம் -செய்தி! வெள்ளம் வந்த போது பாலுக்கு மக்கள் பட்ட அவதி!!!!!
கடவுளே! சினிமா மோகமும், மதுக்கடைகளும் உள்ளவரை இந்த நாடு உருப்படாது! அதில் துளியும் ஐயமில்லை!

பொதுவாக அனைவரும் பணத்தை சேமிக்க ஆசை படுவது இயல்பே! அப்படி சேர்த்த பணத்தை பாது காக்க , எந்த வங்கியில் போடலாம் ,அவ் வங்கி பாதுகாப்பானதா என்றும் யோசிப்பதும் இயல்பே! ஆனால் வள்ளுவன் சொல்லும் வங்கி எது வென்றால், பொருள் அற்றவனாக, தன்னை
அழிக்கின்ற கொடிய பசி நோயால் வாடுகின்றவன் வயிறே ,ஒருவன் பெற்ற பணத்தை வைக்கும் வங்கி என்பதாம் அதாவது ஏழையின் பசியைப் போக்குவதே
அற்றா ரழிபசி தீர்த லஃதெருவன்
பெற்றான் பொருள்வைப் புழி- குறள்

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...