Friday, September 29, 2017

முகநூலில் வந்தவை!



உறவுகளே
துடப்பக் கட்டைக்கும் விளம்பரம் செய்யும் அளவிற்கு
நம் நாடு முன்னேறியுள்து ! பார்த்தீர்களா! மாண்பு மிகு
பிரதமர் அவர்களின் தூய்மை இந்தியா திட்டம் இனி
வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை

மத்திய ,மாநில அரசுகள் தாம்
கொண்டு வரும் திட்டங்கள் செயல் படுதா என்பதைக் கவனிக்காமல் மேன்மேலும் திட்டங்களை அறிவிப்பதால் என்ன பயன் ? அறிவித்த திட்டங்களை
செயல்படுத்த வழிகளை ஆய்ந்து நடைமுறை படுத்தஆவனl
செய்வது அரசின் கடமையாகும் படிப்பறிவு குறைந்த
பாமர மக்கள் அதனை அறிந்து கடை பிடிக்க அரசுதான்
முயல வேண்டும்


மூட நம்பிக்கையை ஒழிக்கத்தான் கர்நாடகச் சட்டசபை சட்டம் போட்டது, ஆனால்அதற்காவே இங்குதோன்றிய ,தந்தை பெரியார் ,அண்ணா வழிவந்த திராவிட இயக்கதில் முக்கிய தலைவர்களான மாறன்
சகோதரர்கள் நடத்தும் சன் டிவியோ நாள்முழுதும் ஒளிபரப்பும் தன சீரியல்கள் மூலம் மூடநம்பிக்கையை
வளர்த்துக் கொண்டிருப்பது முறைதானா?? இதனைத்
தடுக்க வேண்டிய கடமை செயல் தலைவர்,தளபதி அவரகளுக்கு உண்டல்லவா! செய்வாரா?


உறவுகளே
நாம் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை!
நாங்கள் பொய்தான் சொன்னோம் மன்னித்து விடுங்கள் என்று பொதுக்கூட்ட மேடையில் கொஞ்சமும் கூசாமல் கூறுகின்ற அமைச்சர்கள்
ஆட்சி இங்கே நடக்கிறது!இதைவிட கேவலம் வேறு
உண்டா? இனி இறைவன்தான் நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்


புலவர்  சா  இராமாநுசம் 

Tuesday, September 26, 2017

நேற்றுவரை முன்னிருந்தார் போன வழியே – ஐயா நீங்களுமே.! போவதென்ன!? வருதல் பழியே


மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி
மாறினாலும் இதுவரையில் மாறாத் தொல்லை
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்ன தெல்லாம் –மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம்
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும் போக்கே –எடுத்து
துல்லியமாய் காட்டுதந்தோ உற்று நோக்க
நேற்றுவரை முன்னிருந்தார் போன வழியே – ஐயா
நீங்களுமே.! போவதென்ன!? வருதல் பழியே


புலவர்  சா இராமாநுசம்

Monday, September 25, 2017

ஆழ்துளை கிணரும் வற்றியதே-எம்மை அளவில் துயரது பற்றியதே!



ஆழ்துளை கிணரும் வற்றியதே-எம்மை
அளவில் துயரது பற்றியதே
வாழ்வது எவ்வண் வான்மழையே-உடன்
வாராது போவது ஏன்மழையே
வீழ்வது மழைத்துளி நீரன்றே –பொங்கி
வீழுவது இருவிழி நீரொன்றே
சூழ்வது உண்டே! மழைமேகம் –கலையும்
சுடர்கண்ட பனியாம் அதன்வேகம்


புலவர் சா இராமாநுசம்

Sunday, September 24, 2017

சமன்செய்து சீர்தூக்கும் கோலை போன்றே -மன்றம் சரியாக செயல்படின் விளைதலும் நன்றே -நாளும்



சமன்செய்து சீர்தூக்கும் கோலை போன்றே -மன்றம்
சரியாக செயல்படின் விளைதலும் நன்றே -நாளும்
அமர்கின்ற உயர்நீதி மன்றங்கள் தாமே-எடுத்து
ஆராயின் ஊழலை ஒழித்திட போமே - அவரே
தமரென்ற போதும் தவறென்று கண்டால்-சற்றும்
தயங்காது தண்டணை தருவதாய் கொண்டால் -என்றும்
இமயோரும் வாழ்திட இறைவனாய் ஆவார்-அவரே
எல்லோரும் போற்றிட இதயத்தில் வாழ்வார்


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...