Tuesday, February 23, 2016

மாற்றுத் திறனாளிகளுக்காக மனம் வருந்தி எழுதிய கவிதை!




மாற்றுத் திறனாளிகளுக்காக, மனம் வருந்தி எழுதிய கவிதை!

கண்ணில்லார் வாழ்வதே மிகவும் அரிது –கற்ற
கல்வியிலே பட்டமவர் பெற்றல் பெரிது!
எண்ணிலார் அவ்வகையர் வேலைக் கேட்டும்-இன்று
வீதிக்கு வந்தபின்பும் அந்தோ வாட்டும்!
பண்பில்லா அரசாக இருக்க லாமா-என்ன
பாவமவர் செய்தார்கள்! துயரம் போமா!
கண்ணில்லார் அவரா ! நாமே ஆகும் –கேட்கும்
காதில்லார் அரசென்றால் ? துயரா? போகும்!


புலவர் சா இராமாநுசம்

Sunday, February 21, 2016

தன்னலம் காணா தகவுடையாள்-எதிலும் தனக்கென நற்குணம் மிகவுடையாள்




உறவுகளே! வணக்கம்!
இன்று, எனை தவிக்க விட்டு, மறைந்த துணைவி , (மருத்துவர் , பிரமீளா
எம்.பி.பி, எஸ், டி.ஜி.ஓ )அவர்களின் பிறந்தநாள் ,ஆகும் அவர் நினைவாக நான் முன்னர் எழுதிய கவிதை------

தன்னலம் காணா தகவுடையாள்-எதிலும்
தனக்கெ
நற்குணம் மிகவுடையாள்
இன்னவர் இனியவர் பாராமல்-உதவ
எவருக்கும் மறுப்பு கூறாமல்
என்னவள் இவளே செய்திடுவாள்-வரும்
ஏழைக்கே மருந்து தந்திடுவாள்
அன்னவள் மருத்துவ மாமணியே-புகழ்
அறிந்திட இயாலாப் பாவழியே!


புலவர் சா. இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...