Friday, February 23, 2018

ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!




ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில்
உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!
நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று
நோக்கமின்றி சொன்னபடி அளித்தல் கண்டே!
நாட்டுக்கே நலம்செய்யும் ஆட்சி வருமா-என்றே
நல்லோர்கள் ஒதிங்கினால் நன்மை தருமா!
மாட்டுக்கு மூக்கணாங் கயிற்றை போன்றே-நீரும்
மனம்வைத்தால் மாறும்! வரலாறு சான்றே!



புலவர் சா இராமாநுசம்

Tuesday, February 20, 2018

எதையும் சொல்லிப் பயனில்லை!

 

எதையும் சொல்லிப் பயனில்லை
யாரையும் நொந்தும் பயனில்லை
கதையிலும் காணாத் திருப்பங்கள்
கண்டிட மக்கள் விருப்பங்கள்
புகையும் எரிமலை போன்றதுவே
பொங்கிடக் காண்பீர் தோன்றதுவே
பகையும் தீர்ப்பர் ஒருநாளே
பாரீர் விரைவிலத் திருநாளே


புலவர் சா இராமாநுசம்

Monday, February 19, 2018

வாழ்த்து வரவேற்பு!



நன்றி வருக தமிழ்  மணமே!
      வாழ்க வருக !தமிழ்  மணமே!
என்றும் வருக தமிழ்  மணமே!
     இணையில்  தமிழ்  மணமே!

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...