Wednesday, December 7, 2016

முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள் முடமாகி விட்டாரே மத்திய அரசே!


மக்கள் படும் பாடு
--------------------------
முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள்
முடமாகி விட்டாரே மத்திய அரசே!
குறைசொல்லும் நோக்கமல்ல மத்திய அரசே-நெஞ்சக்
குமுறலாம் ஆக்கமிது மத்திய அரசே!
கறையாகும் கறையாகும் மத்திய அரசே –உடன்
கண்நீரைத் துடைப்பிரா மத்திய அரசே!
நிறைவான நிதிதன்னை மத்திய அரசே-துயர்
நீங்கிட உதவுங்கள் மத்திய அரசே!


காலத்தில் உதவாது மத்திய அரசே –மேலும்
காலத்தைக் கடத்தாதீர் மத்திய அரசே!
ஆலத்தை உண்டார்க்கு மத்திய அரசே –தேவை
அவசர சிகிச்சைதான் மத்திய அரசே!
உயிர்மட்டும் மிஞ்சிட மத்திய அரசே-மாற்று
உடைகூட இல்லாது மத்திய அரசே !
வயிர்மட்டும் எதற்காக? மத்திய அரசே-ஏனோ
வைத்தானோ இறைவன் மத்திய அரசே!

புலவர் சா இராமாநுசம்

Sunday, December 4, 2016

வாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக!


வாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும்
வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக!
சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச்
சிந்தனையாம் ஒன்றே நிலையாய் நின்றே!
பாராள வந்தோரின் பாரா முகமே- வானம்
பார்கின்ற விவசாயி காண, அகமே!
கூரான வேல்கொண்டு குத்தல் போல-உள்ளம்
குமிறியழும் நிலைதன்னை காண்போம் சால!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...