இன்று வந்ததே ஒருசெய்தி-நம்
இதயம் துளைக்கும் அச்செய்தி
கொன்றது ஈழத்தில் போதாதா-மாதர்
கொங்கையை அறுக்கும் தீதேதான்
என்று தீரும் இக் கொடுமை-தமிழன்
இருப்பதோ வடவர் கொத்தடிமை
ஒன்றும் செய்ய இயலாதே-பாழும்
உலகமும் ஏதும் முயலாதே
அவிழ்த்த நெல்லி மூட்டையென-ஈழர்
அவனியில் எங்கும் சிதறிவிட
கவிழ்த்த தலையும் கண்ணீரும்-ஈழம்
காண்பதா தினமும் செந்நீரும்
தவித்த வாயிக்கி தண்ணீரே-சிங்களர்
தரவே மறுத்து உண்ணீரேல்
புழுத்துப் போகும் உம்நாக்கே-இந்த
புலவனின் சத்திய மாம்வாக்கே
இதயம் துளைக்கும் அச்செய்தி
கொன்றது ஈழத்தில் போதாதா-மாதர்
கொங்கையை அறுக்கும் தீதேதான்
என்று தீரும் இக் கொடுமை-தமிழன்
இருப்பதோ வடவர் கொத்தடிமை
ஒன்றும் செய்ய இயலாதே-பாழும்
உலகமும் ஏதும் முயலாதே
அவிழ்த்த நெல்லி மூட்டையென-ஈழர்
அவனியில் எங்கும் சிதறிவிட
கவிழ்த்த தலையும் கண்ணீரும்-ஈழம்
காண்பதா தினமும் செந்நீரும்
தவித்த வாயிக்கி தண்ணீரே-சிங்களர்
தரவே மறுத்து உண்ணீரேல்
புழுத்துப் போகும் உம்நாக்கே-இந்த
புலவனின் சத்திய மாம்வாக்கே
இந்தியா என்பது நாடல்ல-நன்கு
எண்ணி ஆய்வது கேடல்ல
இந்தியா என்பது துணைக்கண்டம்-அன்று
எழுதினார் உண்மை எனக்கண்டோம்
இந்தியா என்பது ஒருநாடே-என
எண்ணிய விளைவா இக்கேடே
இந்தியா என்பதோர் நாடென்றால்-உடன்
ஈழத் தமிழரைக் காப்பீரே
எண்ணி ஆய்வது கேடல்ல
இந்தியா என்பது துணைக்கண்டம்-அன்று
எழுதினார் உண்மை எனக்கண்டோம்
இந்தியா என்பது ஒருநாடே-என
எண்ணிய விளைவா இக்கேடே
இந்தியா என்பதோர் நாடென்றால்-உடன்
ஈழத் தமிழரைக் காப்பீரே
போனது போகட்டும் இனியேனும்-இந்தியா
போக்கினை மாற்றி கனிவேனும்
தானது தரட்டும் அவர்வாழ-உற்ற
தருணம் இதுவென உளம்சூழ
ஆனது அனைத்தும் செய்வீரா-அவர்
அவலம் நீக்கி உய்வீரா
வீணது என்றே எண்ணாதீர்-மேலும்
வேதனை எதுவும் பண்ணாதீர்
போக்கினை மாற்றி கனிவேனும்
தானது தரட்டும் அவர்வாழ-உற்ற
தருணம் இதுவென உளம்சூழ
ஆனது அனைத்தும் செய்வீரா-அவர்
அவலம் நீக்கி உய்வீரா
வீணது என்றே எண்ணாதீர்-மேலும்
வேதனை எதுவும் பண்ணாதீர்
புலவர் சா இராமாநுசம்
| Tweet |

