Saturday, September 16, 2017

நீக்கினார் நீக்கினார் செய்தி ஒன்றே-இங்கே நிலையாக ஊடகங்கள் தரவும் இன்றே!



நீக்கினார் நீக்கினார் செய்தி ஒன்றே-இங்கே
நிலையாக ஊடகங்கள் தரவும் இன்றே
நோக்கினால் தலைதானே சற்றும் நன்றே-உள்ளம்
நோகாத நிலைதானே வருதல் என்றே
தேக்கினார் பணிமுற்றும் முடங்கிப் போக-ஆள்வோர்
தினச்சண்டை ஏட்டிக்கி போட்டி யாக
ஆக்கினார் ஆட்சியை நாசம் அந்தோ-மக்கள்
அல்லாட விலையேற்றம் உயரும் அந்தோ


புலவர் சா இராமாநுசம்

Thursday, September 14, 2017

நாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-நாளும் நடுத்தர குடும்பங்கள் பாவ மன்றோ


நாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-நாளும்
நடுத்தர குடும்பங்கள் பாவ மன்றோ
வீதியிலே இறங்கிவர இயலா ரென்றே-இந்த
வேதனையா? எண்ணுங்கள்! செய்வீர் நன்றே!
பாதிக்கும் பலவகையில்! பார்ப்பீரய்யா-அந்த
பாவிகளின் துயரத்தைத் தீர்ப்பீரய்யா
நீதிக்கும் குரல்கொடுக்க துணிய மாட்டார்-இரவு
நிம்மதியும் இல்லாமல் உறங்க மாட்டார்!

பணக்காரர் இதுபற்றி கவலை கொள்ளார்-இங்கே
ஏழைக்கோ ! இலவசம்! தொல்லை யில்லார்
கணக்காக செலவுதனை திட்ட மிட்டும்-மாதக்
கடைசியிலே கடன்வாங்கித் துயரப் பட்டும்
பிணமாக உயிரோடு நடக்கப் பலரும்-வாழும்
பேதைகளாம் நடுத்தரமே! பொழுதா புலரும்!?
குணமென்னும் குன்றேறி நின்றா ரவரே!-அவர்
கொதித்தாலே எதிர்வந்து நிற்பா ரெவரே!

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, September 12, 2017

நன்றி நன்றி தமிழ்மணமே-மீண்டும் நலமுற வந்தாய் தமிழ்மணமே!




நன்றி நன்றி தமிழ்மணமே-மீண்டும்
  நலமுற வந்தாய் தமிழ்மணமே
நின்றே விட்டதோ தமிழ்மணமே-என்றே
  நினைத்தவர்  மனதில் தமிழ்மணமே
நன்றே நிம்மதி தமிழ்மணமே-நீயும்
  நல்கிட வந்தாய் தமிழ்மணமே
நன்றியை கவிதையாய் தமிழ்மணமே-இங்கே
  நவின்றேன் வாழ்க தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

மலரினமே மலரினமே மாசற்ற மலரினமே!


மலரினமே மலரினமே மாசற்ற மலரினமே
நிலமடந்தை நீள்வயிற்றில் நீயுதித்தாய் ஆனாலும்
பலரகத்தில் பாரினிலே பரவிநீ பூத்தாலும்
சிலரகத்தில் மட்டுமந்த சிறப்பான மணமேனோ?

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...