Thursday, August 24, 2017

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து நாளும் மக்கள் அதைப்பேசி




நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 23, 2017

ஊழலும் ஊழலும் ஒன்னாச்சி-சொன்ன ஊழல் எல்லாம் என்னாச்சி




ஊழலும் ஊழலும் ஒன்னாச்சி-சொன்ன
ஊழல் எல்லாம் என்னாச்சி
ஆழமா தோண்டிப் புதைச்சாச்சி-பதவி
ஆசையை அதன்மேல் விதைச்சாச்சி
சூழலுக் கேற்ப நடந்திடவே-டெல்லி
சொற்படி ஆட்சியும் ஓடிடவே
தோழமை ஆனது இருஅணியும்-மேலும்
தோடர்ந்திடும் ஆணைக்கு தினம்பணியும்


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...