Saturday, November 29, 2014

ஆகின்ற ஒன்றா அது !


ஆண்டான் அடிமை  அகம்பாவம்   தீராதோ
ஈண்டார்  வருவாரோ  ஏங்குகிறேன் –வேண்டாவே
போகின்ற போக்கிங்கே போகும்வழி நோக்கற்றே
ஆகின்ற ஒன்றா அது

புலவர்  சா  இராமாநுசம்


Friday, November 28, 2014

பொல்லாதாம்! என்றே புகல் !




சாதியெனும்  தீயிங்கே சாகாமல் தானிருக்க
நீதியெனும் ஒன்றெங்கோ  போயிற்றாம் –ஆதியிலே
இல்லாத  ஒன்றலவா ஏனிந்த வன்கொடுமை
பொல்லாதாம்! என்றே புகல்

Thursday, November 27, 2014

கண்ணில் தெரியக் கயிறு!



தங்கம் விலைகண்டே தான்திருட கள்வர்களும்
எங்குமதைத் தேடுகின்றார் இன்றதனால்- மங்கையரே
எண்ணி நடப்பீரே எப்படிதான் காப்பீரோ
கண்ணில் தெரியக் கயிறு!

Wednesday, November 26, 2014

அம்மா! அறுக்கும் அது !



நாள்காட்டி தானெடுத்தோர் நாளைக் கிழிப்பதுவும்
தாளென்று எண்ணாதீர்! தப்பாகும்! –வாளாகி,
நம்வாழ்வில்! நாளொன்று போனதென நாமறிய
அம்மா! அறுக்கும் அது

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...