Saturday, July 2, 2011

ஈழ வளமையை மீண்டும் தருவாயா

        எழுத எண்ணி எழுந்தேனே-ஆனால்
            இதயம் விம்ம அழுதேனே
        அழுத புலம்பல் கேட்கிலையா-ஈழம்
            அலறிய சேனலை நோக்கிலையா
        விழுதையும் வெட்டி எறிந்தானே-சிங்களன்
            வெறியொடு எங்கும் திரிந்தானே
        தொழுதேன் இறைவா வருவாயா-ஈழத்
              துயரை நீக்கித் தருவாயா

        நாதியும்  அற்றுப் போனானே-தனக்கோர்
             நாடும்  அற்றுப் போனானே
        பீதியே இறைவா எந்நாளும்-ஈழம்
            பெற்றால் உனக்கோர் திருநாளாம்
        வீதி உலாவும்  வருவாயே-எம்
           வேண்டுதல் நடத்தி தருவாயே
        நீதி இல்லா  உலகமிது –துளியும்
           நேர்மை யில்லா உலகமிது


        உன்னை விட்டால் வழியில்லை-ஏனோ
            உனக்குமா கருணை விழியில்லை
        பொன்னை நாங்கள் கேட்கவில்லை-வேறு
             பொருளை நாங்கள் கேட்கவில்லை
        அன்னை ஆமாம் தமிழீழம்-தமிழன்
            ஆண்டால் தானே வளம்சூழும்
        மண்ணை விட்டுத் தரமாட்டோம்-அடிமை
            மண்ணில் உயிரை விடமாட்டோம்

        எத்தனை நாடுகள் இங்குண்டாம்-அவை
             இருந்தும் என்ன பயன்கண்டோம்
        சித்தம் வைப்பாய் இறைவாநீ-வந்து
              செய்வாய் அருள்வாய் விரைவாநீ
        எத்தர்கள் சிங்களர் கயவர்களே-பெரும்
             இனவெறி மொழிவெறி கொடியர்களே
         புத்தரைப் போற்றும தகுதியில்லை-அவர்
             போதனைக் ஏற்கும நாடில்லை


          வருவாய்  இறைவா  வருவாயா-ஈழ
             வளமையை  மீண்டும்  தருவாயா
          திருவாய்  திகழ்ந்ததே எம்தேசம்-சிங்கள
             தீயோர் செய்தார்  படுநாசம்
         ஒருவாய் சோற்றுக்கும் படும்தொல்லை-வேலி
             ஓரம்தானே அவர் எல்லை
         கருவாய்  உருவாய் அழிந்தாரே-உலகம்
            காணவும் கண்ணீர் பொழிந்தாரே
                                                புலவர் சா இராமாநுசம்

                                                              

                                                       
 

Friday, July 1, 2011

மனித உரிமை

எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு
எங்கெனும் தேடியும் காணல்அருமை
இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம்
இறையாண்மை ஆராய பொழுதே விடியும்
மங்காது நடக்குதே மக்களவை-அங்கு
மார்தட்டி தோள்தட்டி கேட்டல் எவை
சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை
செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை

இல்லாத ஒன்றினை எதற்கு நானே-கவிதை
எழுதிட வேண்டுமா முற்றும் விணே
சொல்லாதீர் நானிதை சொன்னதாக-மீறி
சொன்னாலே வாழ்வினில் அமைதிபோக
பொல்லாத விளைவுகள் தேடிவரும்-வீண்
பொல்லாங்கு நாள்தோறும் நாடிவரும்
நல்லோரே இதுதானே மனித உரிமை-நீங்கள்
நம்பங்கள் அதுதானே எனகுப் பெருமை

புலவர் சா இராமாநுசம்

Thursday, June 30, 2011

போனாய் எங்கே தமிழ்மணமே

போனாய்  எங்கே தமிழ்மணமே-எட்டிப்
   பார்த்துடன் மறையும் தமிழ்மணமே
ஆனாய்  என்ன  அறியோமே-எங்கள்
   ஆவலை அடக்க தெரியோமே
தேனாய் இனிக்க வருவாயே-பதிவை
  தேடி  எடுத்துத் தருவாயே
மானெனப் பாய்ந்து போவதுஏன்-வந்து
   மறையும் நிலைதான் ஆவதுஏன்


எங்கே சென்றாய் சொல்வாயா-உன்
   எதிரியை எதிர்த்து வெல்வாயா
இங்கே பலரும்  அலைகின்றார்-தினம்
     ஏங்கி  ஏங்கி குலைகின்றார்
அங்கே தங்கி விடுவாயா-மனம்
     அஞ்சுதே துயரம் படுவாயா
பங்கே உன்னுடன் நாள்தோறும்-வைத்த
   பதிவரின் துயரை உடன்பாரும்

     புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 29, 2011

மேதினம் போற்றுவோம்!


சுரண்டப் படுபவன் தொழிலாளி - அவனை
சுரண்டி உண்பவன் முதலாளி
வரண்ட வாழ்விலே தொழிலாளி - நல்
வளமுடண் வாழ்பவன் முதலாளி
திரண்டிட அணியென தொழிலாளி - ஓடும்
திசைதனை அறியா முதலாளி
மிரண்டவன் பணிந்தது மேதினமே - அதன்
மேன்மையை போற்றுதும் இத்தினமே

வருக வருக மேதினமே - உழைக்கும்
வர்க்கம் போற்றிட மேதினமே
தருக பல்வகை தொழிலோங்க - ஏதும்
தடையின்றி பற்றா குறைநீங்க
பெருகச் செய்வாய் உற்பத்தி - சாதி
பேதத்தை நீக்கும நற்புத்தி
கருக ஆண்டான் அடிமையென - நச்சுக்
கருத்தும் அகற்றிய மேதினமே

செய்யும் தொழிலே தெய்வமென் - முன்னோர்
செப்பிய வழியே செய்வோமென
நெய்யும் தொழிலை நிகழ்துமவன் - நாளும்
நிலைத்திட வறுமை அகத்திலவன்
பெய்யும் மழையென எதிர்நோக்க - உழவன்
பெய்யா நிலையில் துயர்தாக்க
உய்யச் செய்தாய் அன்னவரை - இந்த
உலகம் போற்றிட மேதினமே

போதிய அளவு உழைத்தாலும் - எதிர்த்து
பேசிட உள்ளம் நினைத்தாலும்
பீதியே வந்திடும் முன்னாலே - அவன்
பேச்சும் அடங்கிடும் தன்னாலே
ஊதிய உயர்வு கேட்டாலே - உடன்
உதைக்க வருவான் அடியாளே
மேதினி தன்னில் மேதினமே - அவர்
மேன்மைக்கு காரணம் இத்தினமே

வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
கல்லா கற்றார் பேதமில்லை - வேலைக்
கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை
இல்லார் மாற்று வழியொன்றே - அவர்
எண்ணிடப் திறந்தது விழிநன்றே
எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
இணைந்திட செய்தாய் மேதினமே.

                                        புலவர்   சா.இராமாநுசம் 


Tuesday, June 28, 2011

விடுதலை வேள்வி


விடுதலை வேள்வி எதுவென்ற-பிறர்
வினவும் கேள்விக்கு மிகநன்றே
கெடுதலே அறிந்தும மெழிகுவத்தி-ஒளி
கொடுத்திட உருகும் தீயும்பத்தி
கொடுத்த படமே விடையாகும்-வேள்வி
கொண்டனர் தியாக மரபுயென்ன
தொடுத்தவர் பெற்றார் விடுதலையே-நாம்
தொடரக் காணபது கெடுதலையே
என்ன செய்கிறாய் இறைவாநீ-இன்னும்
எதற்கு இருக்கிறாய் மறைவய்நீ
பொன்னைப் பொருளை தேடுவதம்-அதை
போற்றிக் காக்க நாடுவதும்
தன்னை வளர்ப்பது பொதுவாழ்வே-என
தரமிலார் பெற்றனர் புதுவாழ்வே

புலவர் சா இராமாநுசம்

Monday, June 27, 2011

பெண்கள் கூட்டமும் திரண்டனவே

        கண்ணுக் கெட்டா தூரம்வரை-தம்
          கரங்களில் மெழுகு விளக்கேந்தி
       விண்ணில் மின்னும் விண்மீனாய்-அலை
          வீச தரையோ ஒளிவானாய்
       எண்ணில் தமிழர் வந்தாரே-நல்
           இதய அஞ்சலி தந்தாரே
       பெண்கள் கூட்டமும் திரண்டனவே-சிங்கள
           பேய்வெறிக் கூட்டமும் மிரண்டனவே

       கட்சியை அங்கே  காண வில்லை-மாற்று
          கருத்தும்  அங்கே  காணவில்லை
       கட்சியைவென்றது இன உணர்வே-கண்ட
          காட்சிமுற்றும் தமிழ்  உணர்வே
       மெச்சி வளர்ப்போம் மேன்மேலும்-இந்த
           மேதினி காண வருநாளும்
       அச்சம் சிங்களர்  வாழ்வாகும்-இனி
           அடுத்தது அவர்கள் வீழ்வாகும்


       தோன்றி விட்டது விடிவெள்ளி-இனி
           தோற்க கயவர்கள் உலகெள்ளி
       சான்றே நேற்று கண்டோமே-புது
           சரித்திரம் படைத்துக் கொண்டோமே
       எத்தனை துயரம் பட்டாரே-துளியும்
            இரக்க மின்றி சுட்டாரே
       மொத்தமும் திருப்பி தருவோமே-வட்டியும
           முதலும் கொடுக்க வருவோமே

                 புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...