Friday, October 21, 2016

அளவின்றி வாழ்த்துகளை அளித்தீர் நீங்கள்-நானும் அகமோடு முகம்மலர ஏற்றேன்! உங்கள்



அளவின்றி வாழ்த்துகளை அளித்தீர் நீங்கள்-நானும்
அகமோடு முகம்மலர ஏற்றேன்! உங்கள்
உளமகிழ என்நன்றி மலரை ஏற்பீர்- பொங்கும்
உணர்வுகளை உரைத்திடவே இயலா! காப்பீர்!
வளம்திகழ வாழ்வாங்கு வாழும் வரையில்-ஐயன்
வள்ளுவனின் சொற்படியே முடிந்தவரையில்
நலம்திகழ நடந்திடுவேன் உறுதி! உறவே-மீண்டும்
நவில்கின்றேன் நன்றியென ! அறியேன் கறவே!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, October 19, 2016

என் பிறந்தநாள் இன்று! வாழ்த்துங்கள் உறவுகளே!



உறவுகளே! வணக்கம்
இன்று என் பிறந்தநாள்! நேற்றோடு எண்பத்து மூன்று முடிந்து ,இன்று எண்பத்து நான்கு தொடங்குகிறது! வலைத்தள
நண்பர்களும் முகநூல் அன்பர்களும்தான் என்னை வாழ வைக்கும்
தெய்வங்கள்! வாழ்த்துங்கள்! நான் வாழும் வரை உங்களை மறவேன்!
அன்பன், புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...