Wednesday, September 28, 2011

எனது தாய்மொழி

எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே

என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே

கன்னித் தமிழாம் கனியின் சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்

இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும்
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை

புலவர் சா இராமாநுசம்

55 comments :

  1. //இன்னல் பலபல எய்திய போதும்
    எதிரிகள் செய்திட கலப்பட தீதும்
    கன்னல் தமிழே கலங்கிய தில்லை
    காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை //

    தமிழின் சிறப்பே இன்றும் என்றும் தனிச்சிறப்புதான் ஐயா.அதிலும் தங்கள் தளத்தில் மென்மேலும்..

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  2. நம் தமிழை சிறப்பித்தமைக்கு நன்றி! ஐயா!

    ReplyDelete
  3. தாய்மொழியை சிறப்பித்து கவிதை. வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  4. தமிழ்மணம் இணைத்து முதல் ஓட்டும் போட்டாச்சு.

    ReplyDelete
  5. நம்ம சைட்டுக்கு வாங்க!
    தளத்துல இணைச்சுகிடுங்க!
    உங்க கருத்த சொல்லுங்க!
    நல்லா பழகுவோம்!...

    ReplyDelete
  6. உலக மொழியொன்று வேண்டுமென்று
    உரக்க கூவிடும் உலகில்
    கலகம் செய்தீர்கன்னி தமிழ்மொழி
    காரிய மாற்றும் அதற்கென

    ReplyDelete
  7. சம்பத்குமார் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. குடிமகன் said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. தமிழ்வாசி - Prakash said


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. தமிழ்வாசி - Prakash said...

    தமிழ்மணம் இணைத்து முதல் ஓட்டும்
    போட்டதற்கு நன்றி
    முயன்று பார்த்தேன் மேலும் சிலருக்கு
    ஓட்டுப் போட்டாலும் பதிவாவதில்லை எனக்கும்
    அப்படி ஆவதாக சிலர் சொல்கிறார்கள்
    காரணம் தெரியவில்லை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. suryajeeva said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. சீனுவாசன்.கு said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    நானும் வந்தேன்!

    ReplyDelete
  13. சத்ரியன் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. அ. வேல்முருகன் said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. //கன்னித் தமிழாம் கனியின் சுவையாம்
    காலத்தால் என்றும் அழியா மொழியாம்
    என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
    எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்//

    மிகவும் அற்புதமாக உள்ளது. தாங்கள் பாடும் கவியின்பத் தமிழுக்கு என் பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  16. என்றும் இளமை குன்றா மொழியே
    ஈடே இல்லா தமிழரின் விழியே
    நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
    நானிலம் போற்றும் வளமையும் உண்டே

    ...........நல்ல வரிகள் ஐயா. தமிழ்ப் புனலில் குளித்தெழுந்த ஓர் நிறைவு

    ReplyDelete
  17. //இன்னல் பலபல எய்திய போதும்
    எதிரிகள் செய்திட கலப்பட தீதும்
    கன்னல் தமிழே கலங்கிய தில்லை
    காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை //

    மிக மிக அற்புதம்

    ReplyDelete
  18. அற்புதமான வரிகள் ஐயா.....

    ReplyDelete
  19. அழகிய தமிழுக்கு அழகான கவிதை

    ReplyDelete
  20. அருமையான கவிதை,தமிழுக்கு ஒரு பாமாலை.

    ReplyDelete
  21. அருமை புலவரே..

    நீங்கள் விடும் மூச்சுக் காற்றும் மரபுக் கவிதைதான் பாடுகிறதா??

    தமிழருவி கேள்விப்பட்டிருக்கிறேன்..
    கவியருவி தங்கள் எழுத்துக்களிலேயே ஓடக் காண்கிறேன்..

    ReplyDelete
  22. என்றும் இளமை குன்றா மொழியே..

    அதனைத் தங்கள் எழுத்துக்களே காட்டுகின்றன புலவரே..

    ReplyDelete
  23. தாய்மொழியை சிறப்பித்து கவிதை...அருமை புலவரே...

    ReplyDelete
  24. ம் தமிழ் தாய்க்கு மகனின் வாழ்த்து.. பாராட்டுக்கள் ஐயா..

    ReplyDelete
  25. கா ந கல்யாணசுந்தரம் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. கீதா said...

    சகோதரி

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. கலாநேசன் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. வெங்கட் நாகராஜ் said


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. M.R said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. சென்னை பித்தன் said...

    நன்றி!ஐயா

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. முனைவர்.இரா.குணசீலன் said


    முனைவரே வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. முனைவர்.இரா.குணசீலன் said

    முனைவரே! நன்றி நன்றி நன்றி!

    ReplyDelete
  33. ரெவெரி said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. காட்டான் said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. தமிழ்மொழியின் சிறப்புதனை சிறப்பாக உரைக்கும் மணிக்கவிதை !

    ReplyDelete
  36. அருமையான கவிதை வரிகள் உங்கள் புலமையைக்கண்டு தலை வணக்குகின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .......

    ReplyDelete
  37. என் தாய்மொழியும் தமிழ் என்று சொல்வதில் பெருமையாக இருக்கு ஜயா...தாய் மொழிக்கு அழகான ஒரு கவிதை.

    ReplyDelete
  38. //
    என்றும் இளமை குன்றா மொழியே
    ஈடே இல்லா தமிழரின் விழியே
    நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
    நானிலம் போற்றும் வளமையும் உண்டே
    //
    நல்ல வரிகள் .. உண்மையான வரிகள்

    ReplyDelete
  39. தமிழை நல்லாவே சிறப்பித்து இருக்கிறீர்கள்

    ReplyDelete
  40. தனிமரம் said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  41. அம்பாளடியாள் said

    சகோதரி

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  42. .s.s.Rajh said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  43. என் ராஜபாட்டை"- ராஜா said... வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  44. வைரை சதிஷ் said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  45. இனிய இரவு வணக்கம் ஐயா,

    தாய் மொழியின் பெருமைதனைச் சொல்லுகின்ற அருமையான கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

    ரசித்தேன்.

    ReplyDelete
  46. எம்மொழியாம் பொன்மொழிக்கோர்
    சந்தக்காவியம் படைத்தீரே!
    மரபுகளின் மன்னவன் ஆனீரே!

    கவிதை அழகு புலவரே...

    ReplyDelete
  47. நிரூபன் said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  48. மகேந்திரன் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  49. தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

    ReplyDelete
  50. மாய உலகம் said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  51. கன்னல் தமிழே கலங்கிய தில்லை
    காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை

    இனிய கவிதைக்குப் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  52. இராஜராஜேஸ்வரி saidசகோதரி

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  53. தித்திக்கும் திகட்டாத அழகிய தமிழ் மொழியை சிலாகித்து சொன்ன வரிகள் மிக அழகு ஐயா....

    அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு....

    நீங்கள் சொன்ன வேங்கட துதி எங்கேன்னு தேடுகிறேன் ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...