Thursday, February 2, 2012

ஐயா கூகுல் ஐயாவே!


 கூகுல் செய்வது பெரும்சேவை-ஏனோ
        கொடுத்தார் நமக்கே மனநோவை
போகும் டாட்காம் என்றேனும்-இன்
         புகுந்திடும் பதிலாய் என்றேனும்
ஆகும் என்றே ஒருசெய்(தீ)தி-முன்பே
       அறிந்தால் வருமா இப்பீதி
வேகும் நெஞ்சும் இதனாலே-நம்
        வேதனை நீங்குதல் எதனாலே

காலையில் எழுந்ததும் இம்மாற்றம்-கண்
      கண்டது! கொண்டது! ஏமாற்றம்!
மாலை வரையிலும் புரியவில்லை-இதை
      மாற்றிய காரணம் தெரியவில்லை
சாலையின் குறுக்கே மாமரமே-புயல்
      சாய்த்தது போல துயர்தருமே
ஆலையில் பட்ட கரும்பானோம்-கடல்
       அலையில் வீழ்ந்த துரும்பானோம்

ஐயா கூகுல் ஐயாவே-துன்பம்
       அடைந்தார் பலரும் ஐயாவே
பொய்யா ! இல்லை வலையுலகே-இப்
        புலம்பல் ஒலிக்கும் நிலையுளதே
செய்யா தவறுக்கு தண்டணையா-என
        சிந்தையில் வருத்தம் கொண்டய்யா
மெய்யா இன்றுள நிலைதானே-இதனை
      மேலும் விளக்கிட இலைதானே!

                            புலவர் சா இராமாநுசம்

28 comments :

  1. கூகுளின் அதிரடி மாற்றம் பற்றி நல்ல கவிதை அருமையாக இருக்கு

    ReplyDelete
  2. கூகுளை கில்லிய விதம் மிக மிக அருமை ஐயா !!
    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. K.s.s.Rajh said...

    நன்றி நண்பரே!

    என் வலையின் புதிய முகவரி;-
    http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. ஐயா... கூகுளுக்கு இந்த கவிதை புரியுமா?
    கூகுள் மாற்றம் நமக்கு ஏமாற்றம் தான் ஐயா.

    ReplyDelete
  5. கூகிளின் மாற்றங்கள் அடிக்கடி
    ஏற்படும் ஒன்று. ஆனால் நம்மை
    இப்போது ஏற்படும் மாற்றங்கள் மிகுந்த
    இன்னல்களுக்கு உண்டாக்கி உள்ளது.
    அழகான அறிவுரைக் கவிதைக்கு
    நன்றிகள் புலவர் பெருந்தகையே...

    ReplyDelete
  6. நல்ல கவிதை...சில அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது....

    .blogspot.com என்பது .blogspot.in என்று மாறிவிட்டது....

    ReplyDelete
  7. ம்...நிச்சயம் அவர்களும் அறிந்திருப்பார்கள்.ஆவன செய்வார்களா !

    ReplyDelete
  8. நல்ல கவிதை ஐயா ! மாற்றம் எத்தனை வந்தாலும் அனைவரும் பயன் அடையுமாறு இருந்தால் நன்றாக இருக்கும் !

    ReplyDelete
  9. கூகுள் குழப்பத்துக்கும் கவி வடித்தத் திறன் கண்டு வியக்கிறேன். பாராட்டுகள் ஐயா. விரைவில் குழப்பம் தீருமென்று நம்புவோம்.

    ReplyDelete
  10. நல்ல கவிதை ஐயா.. என்ன செய்ய ககுலை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது நம்மலாள்

    ReplyDelete
  11. எல்லாம் நன்மைக்கே. குழப்பத்திலும் ஓர் நன்மை. தங்களிடமிருந்து ஓர் அருமையான அனுபவக்கவிதை பிறக்கக் காரணமாகி விட்டது. ;)

    ReplyDelete
  12. வணக்கம்!

    //கூகுல் செய்வது பெரும்சேவை-ஏனோ
    கொடுத்தார் நமக்கே மனநோவை//

    எல்லோருக்கும் உண்டான திடீர் குழப்பத்தை கவிதையாக வடித்து விட்டீர்கள். இருந்தாலும் கூகிளுக்கு நன்றி சொல்வோம்!

    ReplyDelete
  13. கூகுளில் ஒரு தமிழ்ப் புலவர்!
    நல்ல கவிதைகள் தருகிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது!
    தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.

    ReplyDelete
  14. K.s.s.Rajh said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. dhanasekaran .S said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. தமிழ்வாசி பிரகாஷ் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. மகேந்திரன் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. வெங்கட் நாகராஜ் said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. ஹேமா said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. திண்டுக்கல் தனபாலன் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. கீதா said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. Riyas said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. வை.கோபாலகிருஷ்ணன் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. தி.தமிழ் இளங்கோ said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. பரமசிவம் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. தி.தமிழ் இளங்கோ said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. ஒவ்வொரு வலைப்பதிவர்களின் மனப் பாங்கை அருமையாக இந்த கவிதை பதிவு செய்துள்ளது. அருமை புலவரே

    ReplyDelete
  28. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...