Tuesday, November 4, 2014

பிழையன்றோ ? ஆள்வோரே எண்ணி பாரீர்- ஏழைப் பேதையராம் அன்னவரை காக்க வாரீர்!



ஏதேதோ  நடக்குது  நாட்டுனிலே –முழுதும்
   எழுதிட  முடியுமா  பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ  தெரியாது  வாழுகின்றோம்-போகும்
   திசைகாணா துயர்தன்னில்  வீழுகின்றோம்-மேலும்
போதாது விலைவாசி  விண்ணைமுட்ட –தினம்
   புலம்பிட  மக்களும்  கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட  இயலவில்லை-ஏதோ
   உள்ளத்தை  வருத்திட வந்ததொல்லை


பகல்கொள்ளை  படுகொலை  பெருகிப் போச்சே-நாளும்
    பயத்துடன்  வாழ்கின்ற  நிலையு மாச்சே!-வேறு,
புகலென்ன ! வழியின்றி!  வருந்த லாச்சே-நாடும்
     போவதென்ன  காடாக!  மாற லாச்சே!-மேலும்
மழைவெள்ளம்! இட்டபயிர் அழிந்து போக-கண்டே
    மனம்குமுறும்  விவசாயி நொந்து சாக!-நீதியில்,
பிழையன்றோ ? ஆள்வோரே  எண்ணி பாரீர்- ஏழைப்
    பேதையராம் அன்னவரை காக்க  வாரீர்!

புலவர்  சா  இராமாநுசம்

8 comments :

  1. அருமையான வரிகள்! எல்லோரது ஆதங்கத்தையும் அழகிய வரிகளாய் குவித்து விட்டீர் ஐயா!

    ReplyDelete
  2. #காக்க வாரீர்!#
    எந்தக் காலத்தில் அய்யா வந்தார்கள் ?
    த ம 2

    ReplyDelete
  3. ஆள்வாரை ஆண்டவனாய்ப் போற்றினாலும் ஏழைக்குத்
    தோள்கொடுக்கும் பாட்டோ துடிப்பு!

    அருமையான பாடல் புலவர் ஐயா.

    ReplyDelete
  4. பயத்துடனே வாழும் நிலை தான் தொடர்கிறது. ஆதங்கம் வெளிப்பாட்டாக.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா !

    இன்றெனது எண்ணத்தில் பொங்கிய அதே உணர்வு கண்டு உள்ளம் தங்களை வணங்குகிறது ! மிக்க நன்றி ஐயா அருமையான இப் பாவரிகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு .

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...