Thursday, June 2, 2011

புலம்பெயர் ஈழத் தமிழர்களே

      புலம்பெயர் ஈழத் தமிழர்களே-உங்கள்
        போக்கில் வேண்டும் மாற்றங்களே
      நிலவிட வேண்டும் ஒற்றுமையே-உடன்
         நீங்கிட வேண்டும் வேற்றுமையே
      வலைதனில் காணும் கருத்துகளே-கவிதை
          வடித்திட காரணம் பொறுத்திடுக
      நிலைதனை தெளிவாய் அறிவீரே-நீர்
         நிச்சியம் ஈழம் பெறுவீரே

    இதுவரை நடந்ததை எண்ணாதீர்-கடந்த
        எதையும் பெரிது பண்ணாதீர்
    புதுவழி காணல் ஒன்றென்றே-அறப்
        போரினை தொடங்குவீர் நீரின்றே
    அதுவரை  நடக்கும பேயாட்டம்-சிங்கள
      ஆணவ நாய்களின் வாலாட்டம்
    எதுவரை இந்தியா கைகொடுக்கும்-அதை
       எதிர் வரும் காலம் காண்பிக்கும்

   வஞ்சக சிங்களர் சொயலாலே-உங்கள்
       வாழ்வில் வீசிய புய லாலே
   தஞ்சம் தேடி உலக கெங்கும்-இன்றே
      தங்கிப் பலரே அங்கங் கும்
  பஞ்சம் இன்றி வாழ் கின்றீர்-பெரும்
      பட்டம் பதவி சூழ் கின்றீர
 நெஞ்சில் நிம்மதி ஒரு நாளும்-ஈழ
     நினைவால் வாரா துயர் மூளும்

பிறந்த மண்ணை மறப் பீரா- விட்டுப்
     பிரிந்த உறவை  மறப் பீரா
திறந்த வெளியில் முள் வேலி-அங்கே
     தேம்பும் மக்களை மறப்பீரா
இறந்த காலத்தை மறந் திடுவீர்-தனி
      ஈழம் காண முனைந் திடுவீர்
சிறந்த முடிவை எடுப் பீரே-என
      செப்பினேன் வேண்டி முடிப் பீரே

                            புலவர் சா இராமாநுசம்

1 comment :

  1. பதிவுலகுக்கு வருக வருக என வரவேற்கிறேன்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...