Monday, December 26, 2011

ஓடி உதைத்து விளையாடு!


ஓடி உதைத்து விளையாடு!-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு!
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல
பண்பை என்றும் நீநாடு!
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்க தயங்காதே!

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே!
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே!
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!

ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு!
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பும் பெருமை உளம்பூண
 
                     புலவர் சா இராமாநுசம்

33 comments :

  1. இன்றைய நிலைக்கு ஏற்றார்ப் போல அருமையான பாடல்
    பகிர்வுக்கு நன்றி
    த.ம 1

    ReplyDelete
  2. /////
    அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
    அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!
    ///

    இதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது...

    உணர்வுமிக்க அழகிய கவிதை

    ReplyDelete
  3. //செவ்வழி இவையே நலங்காண-பிறர்
    செப்பும் பெருமை உளம்பூண//

    ஆமாம் அய்யா! அனைத்தும் இளைய தலைமுறை சிந்திக்க வேண்டியவை.

    ReplyDelete
  4. பிறர்
    ஏய்க வந்தால் நீசாடு // சூப்பர்..

    ReplyDelete
  5. கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
    கொள்கையைக் காக்க தயங்காதே!
    ‌-வைர வரிகள்! அழகிய கவிதையைப் படித்ததில் கொள்ளை மகிழ்ச்சி புலவரையா! தங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். (என் தளத்தில் தங்களுக்கிட்ட மறுமொழியை மீண்டும் ஒருமுறை வந்து காண அன்புடன் அழைக்கிறேன்)

    ReplyDelete
  6. நல்வினைச் செய்திகள் நலம்பட உரைத்தீரே, விளையாட்டில் ஓடி உதைக்க சொன்னது பந்தையன்றோ
    மாற்றுப் பொருளில் புரிதல் தவறன்றோ. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  7. நல்ல கவிதை... //கோடி தரினும் மயங்காதே... கொள்கையைக் காக்கத் தயங்காதே// அற்புதமான வரிகள்....

    பகிர்வுக்கு நன்றி புலவரே...

    ReplyDelete
  8. புலவர் பெருந்தகையே,
    இன்றைய இளைய சமுதாயத்திர்கோர்
    அழகிய கவிதை புனைந்தீர்கள்.
    அருமை அருமை.

    ReplyDelete
  9. Vilaiyattu, Tamil Unarvu, Iyargai paathukappu anaithum valiyuruthum Azhagu Kavithai Ayya!

    TM 10.

    ReplyDelete
  10. அருமையான கவிதை.
    வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  11. ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது
    உரிமைக்கு வந்தால் போராடு!

    நிச்சயம் ஐயா!

    ReplyDelete
  12. நலம் காணும் செவ்வழிகள் நன்று.
    குலம் காக்க குழந:தைகள் பின்பற்றலாம்
    நன்று...நன்று..நலம் பல மலர்க!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. தமிழோடு விளையாடுவதும் சந்தோஷம்தான் ஐயா !

    ReplyDelete
  14. ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது
    உரிமைக்கு வந்தால் போராடு! ////

    அருமையான வரிகள்...
    உரிமையை விட்டுக் கொடுக்ககூடாது....

    ReplyDelete
  15. Ramani said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. கவிதை வீதி... // சௌந்தர் // said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. shanmugavel said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. வேடந்தாங்கல் - கருன் *! said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. கணேஷ் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. G.M Balasubramaniam said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. வெங்கட் நாகராஜ் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. மகேந்திரன் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. துரைடேனியல் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. Rathnavel said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. கோகுல் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. kovaikkavi said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. ஹேமா said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. தமிழ்வாசி பிரகாஷ் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. அருமை இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜயா

    ReplyDelete
  31. தமிழ் வாசம் வீசும் சந்தனக்கவிதை!!

    ReplyDelete
  32. பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பாடமாய் வைத்துப் பாடச்சொல்லிக் கருத்துக்களைக் கற்றுத்தரலாம். அத்துனை அருமையான கவிதை.. பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...