Tuesday, March 19, 2013

ஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று ஊர்தோறும் விரதமென ஒன்று பட்டார்


ஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று
ஊர்தோறும் விரதமென ஒன்று பட்டார்
பட்டுமெத்தை பதவிசுகம் தேடீ யல்ல!-அவர்
படிக்காமல் பட்டம்பெற விரும்பி அல்ல
திட்டமிட்டு தினந்தோறும் சிங்கள வெறியன் -பெரும்
தீங்குதனை தமிழருக்கு இழைக்கும் சிறியன்
கொட்டமிடும் பக்சேவை குற்றக் கூண்டில்
கொலைக் குற்றவாளியென நிறுத்தல் வேண்டி!

மறவர்குல மாணிக்கம் மாணவர் ஆமே -இங்கே
மனமுருகி துயர்பட்டு பொங்கி தாமே
அறவழியில் போராடி வருதல் காண்பீர் -காந்தி
அண்ணல்வழி வெற்றியென உறுதி பூண்பீர்
இனவெறியன் தண்டனைக்கு மத்திய அரசே-உடன்
ஏற்கட்டும் உறுதியென போரின் முரசே
தனையிங்கே கொட்டிவிட ஆவன செய்வீர் -எவர்
தடுத்தாலும் ஓயாது! அறிந்தால் உய்வீர்!

புலவர் சா இராமாநுசம்

3 comments :

  1. /// அறவழியில் போராடி வருதல் காண்பீர் -காந்தி
    அண்ணல்வழி வெற்றியென உறுதி பூண்பீர் ///

    உணர வேண்டிய வரிகள்...

    ReplyDelete
  2. கொட்டமிடும் பக்சேவை குற்றக் கூண்டில்
    கொலைக் குற்றவாளியென நிறுத்தல் வேண்டி!// ஆம் அய்யா

    ReplyDelete
  3. இனவெறியன் தண்டனைக்கு மத்திய அரசே-உடன்
    ஏற்கட்டும் உறுதியென போரின் முரசே
    தனையிங்கே கொட்டிவிட ஆவன செய்வீர்

    உணர வேண்டிய வரிகள், உணர்த்த வேண்டிய வரிகள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...