Friday, May 24, 2013

பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின் பூமியில் புகழச் சொல்லேது!



காலம் ஓடும் நிற்காதே-வீண்
  காலம் கடத்தல் ஆகாதே!
ஞாலம் சுற்றும்! யாராலே-தினம்
   நடப்பது இயற்கைப் பேராலே
ஆலம் கூட மருந்தாகும்-தூய
  அன்பே ஏழைக்கு விருந்தாகும்
கோலம் அழகு! வாசலுக்கு-நல்லக்
   கொள்கை அழகு! பேசலுக்கு

திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய
   தேவைக்குச் செலவும் செய்வீரே
பட்டம் பதவி எனத்தேடி-மனிதப்
   பண்பை மறந்துப் பணம்நாடி
கொட்டம் போட வேண்டாமே-வெற்றிக்
    கொடிகட்டிப் பறக்க ஈண்டாமே!
எட்டிக் கசத்தல் இயல்பன்றோ-இதை
   எண்ணா செயல்தரும் துயரன்றோ

மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
   மனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
   சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நம்
   குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுய
   சிந்தனை தன்னில் ஆழ்வோமே

வையம் தன்னில் வாழ்வாங்கு-நாம்
   வாழ என்றும் புகழோங்கும்
செய்யும் செயலைத் தெளிவாக-நாம்
    சீர்பட செய்யின் களிவாக
உய்யும் வழியே உருவாகும்-அதற்கு
   உண்மை, உழைப்பு எருவாகும்!
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
   பூமியில் புகழச் சொல்லேது!

                   புலவர் சா இராமாநுசம்


26 comments :

  1. கோலம் அழகு! வாசலுக்கு-நல்லக்
    கொள்கை அழகு! பேசலுக்கு//உண்மைதான் அய்யா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. சுற்றம் சூழ வாழ்வோமே!-சுய
    சிந்தனை தன்னில் ஆழ்வோமே

    சுற்றம் சூழ வாழாததும், ஒன்று பட்டு நிற்காததும்தானே அய்யா, நமது இந்நிலைக்குக் காரணம். சரியாகச் செர்ன்னீர்கள் அய்யா. இனியாவத சுய சிந்தனை செய்யத் தொடங்கட்டும் நம் இனம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. ஒவ்வொரு வரியும் சிறப்பு...

    வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. வரிக்கு வரி வாழ்க்கைக்கு வேண்டிய வழிமுறைகள், அருமை ஐயா.

    ReplyDelete
  5. பாலும் தெளிதேனும் கலப்பதைப்போல்
    அனுபவமும் புலமையும் கலக்கப் பிறந்த
    கவிதை அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. வாழும் வகை யாதெனவே
    வளமாய் தந்தீர் பாக்களினால்
    பாழும் புத்தியில் பதித்திட்டாலால்
    மேலும் சிறப்பாய் இருந்திடலாம்
    வீழும் எழும்பும் நாளதைபோல்
    சூழும் துன்பமும் எனநினைத்தால்
    நாளும் நலிவு ஏனய்யா
    ஆழப்பதிய அறிவு சொன்னீர்.

    அழகான கவியால் அருமையான செய்தி தந்தீர்கள் ஐயா.
    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    த ம. 6

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் பாடல் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. உண்மை, உழைப்பு எருவாகும்!
    பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
    பூமியில் புகழச் சொல்லேது!

    அருமையாகச் சொன்னீர்கள் புலவரே.

    உழைப்பை மனிதன் ஏமாற்றலாம்
    உழைப்பு மனிதனை எப்போதும் ஏமாற்றுதில்லை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. அனைத்து வரிகளும் சிறப்பு.
    கவிதை அருமையாக உள்ளது புலவர் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. செய்யும் செயலைத் தெளிவாக-நாம்
    சீர்பட செய்யின் களிவாக
    உய்யும் வழியே உருவாகும்-அதற்கு
    உண்மை, உழைப்பு எருவாகும்!
    பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
    பூமியில் புகழச் சொல்லேது! // அருமையான வரிகள்! சீரிய கவிதை! பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  10. // பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
    பூமியில் புகழச் சொல்லேது!//

    உன்மையான வரிகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  11. உண்மையாய் வாழ்வது கடினம் எனினும் உண்மையான
    வாழ்வே வாழ்வாகும் என தெள்ளத் தெளிவாக எடுத்துரைத் விதம்
    அருமை ஐயா ! மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  12. \\ஆலம் கூட மருந்தாகும்-தூய

    அன்பே ஏழைக்கு விருந்தாகும்\\

    அருமையாகச் சொன்னீர்கள். வரிக்கு வரி மனிதவாழ்வின் மேம்பாட்டுக்கும் மனவளத்துக்குமான அறவுரைகள்... அறிவுரைகள்.. அனைத்துக்குமாய் மனங்கனிந்த பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  13. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...