Wednesday, December 25, 2013

ஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்






ஏசுவே மீண்டும் வாரும்
   இங்குள்ள  நிலையைப்  பாரும்
பேசுவ அனைத்தும்  பொய்யே
   பிழைப்பென! காண்பீர்  மெய்யே!
கூசுவ அரசியல்  போக்கே!
    குறைகண்டே  விரைந்தே நீக்க!
தூசிவ! துடைக்க  வாரும்!
    துயர்போக எம்மைக்  காரும்!

கருணையின்  வடிவம்  நீயாய்
   காப்பதில் அன்புப்  தாயாய்
பெருமையும் பெற்றவர்  ஆக,
    பேசுதல் நிலையாய்ப்  போக!
உருவமே பெற்று  வருவீர்
    உலகினைக்  காத்தே அருள்வீர்!
தருணமே  இதுதான்!  ஆகும்!
    தவறிடின் ! அழிந்து போகும்!

             புலவர்  சா  இராமாநுசம்

15 comments :

  1. வணக்கம்
    ஐயா.
    கவிதை மிக அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான வரிகள்... அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. தங்கள் அழைப்பு மெய்யாகட்டும். ஏசுநாதர் விரைந்து வரட்டும்!

    ReplyDelete
  4. இன்றைய சூழலை உணர்ந்து வடித்த கவிதை மிக அருமை. தங்கள் வேண்டுதல் மெய்யாகட்டும். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. சிறந்த கருத்தை வெளிப்படுத்தும் கவிதை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. கருணையின் வடிவம் நீயாய்
    காப்பதில் அன்புத் தாயாய்

    உங்கள் வேண்டுதல் நிறைவேற நிச்சயம்
    வருவார் வழங்குவர் அனைத்தும்.

    நியாயமான நல்ல கருத்துக்கள்.

    இனிய நல் நத்தார் வாழ்த்தும் புத்தாண்டு வாழ்த்தும் உரித்தாகட்டும்....!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. நல்ல கவிதை. இப்போதைக்கு தேவை ஒரு நல்ல மேய்ப்பர் தான்....

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...