Friday, January 3, 2014

அம்மா முதல்வர் அம்மாவே –கைது ஆவதா மீனவர் அம்மாவே




அம்மா முதல்வர் அம்மாவே –கைது
    ஆவதா ? மீனவர்  அம்மாவே
சும்மா சும்மா நடக்குதே –துயர்
    சுமந்து நெஞ்சம் வெடிக்குதே
இம்மா நிலத்தில் அவர்வாழ –இனி
    இடமே இல்லையா !நலம்சூழ
அம்மா முடிவு எடுப்பீரே –இந்த
     அவலத்தை உடனே தடுப்பீரே

துணிவே துணையாய்க்  கொண்டவரே-கைது
     தொடர்கதை யாவதைக் கண்டவரே
இணயாய்  நாங்களும் வருகின்றோம் –மக்கள்
     எழுச்சியைத் திரட்டி தருகின்றோம்
அணையாய் அனைவரும் ஒன்றாக –கடல்
     அலையென ஓய்வு இன்றாக
பணிவாய் உம்மை  வேண்டுகிறோம் –அறப்
     போர்செய உடனே தூண்டுகிறோம்

             புலவர்  சா  இராமாநுசம்




6 comments :

  1. அம்மா தான் இந்த அவலத்தை தடுக்க விரைவில் முடிவெடுக்க வேண்டும்...

    ReplyDelete
  2. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை இந்த அவலம் தொடரும் !
    +1

    ReplyDelete
  3. விரைவில் முடிவு பிறக்கட்டும்

    ReplyDelete
  4. முடிவு பிறக்கட்டும்...

    த.ம. +1

    ReplyDelete
  5. சிறந்த கருத்துப் பகிர்வு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...