Wednesday, June 11, 2014

முகநூல் துணுக்குகள்!




1 உறவுகளே! வணக்கம்!

உலகில் , மனிதனாகப் பிறந்த , ஒவ்வொருவரிடமும் குணமும்
உண்டு, குற்றமும் உண்டு . இரண்டின் கலவைதான் மனிதப் பிறவி
குற்றமே செய்யாதவர் ,குணமே இல்லாதவர் , என எவருமே இல்லை
ஆகவே, நாம் எவரோடு தொடர்பு வைப்பது ,என்றால் , அவரிடம் உள்ள
நல்ல குணங்களை ஆய்வு செய்தும், குற்றங்களை ஆய்வு செய்தும் ,அவற்றுள் எது அதிகமாக (குணம், குற்றம்) உள்ளதோ , அதனை ஏற்று
பழகுவது நன்று!

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.- குறள்


2 உறங்கிக் கிடக்கும் தமிழகமே! எழுவாயா! அன்றி, அழிவாயா!!!!?

முல்லைப் பெரியாறு என்றாலே , கட்சி வேறுபாடுகளை மறந்து
ஒரணியாய் திரள்கிறது கேரளம்! அதுபோலவே கர்நாடகமும் காவிரி
மேலாண்மைக் குழு அமைக்க எதிர்த்து ஒரணியாய் திரள்கிறது!! ஆனால் .......? தமிழகமோ !இங்குள்ள, கட்சிகளோ......

அவிழ்த்துக் கொட்டிய நெல்லிக்காய் மூட்டைபோல, சிதறி, உதிரிப் பூக்களாய் ஒட்டாமல் ஈகோ யுத்தம் நடத்துகின்றன! ஒன்றுபட வேண்டாமா ! நீரின்றி தமிழகம் பாலைவனம் ஆவதை தடுக்க, வேண்டாமா காலம் தாழ்த்துவது நன்றல்ல!
எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்களே, உரிய முயற்சி எடுத்து
அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து, ஒன்று படுத்தி அழைத்துச் சென்று பாரதப் பிரதமர் அவர்களை சந்தித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல் படுத்த ஆவன செய்ய வேண்டும் !




3 சொல்லுகின்ற பொருள் ,நல்லதோ, கெட்டதோ ,எதுவானாலும், அதனைச் சொல்லுகின்றவர் , உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ ,எவரானாலும்,நாம், அப்பொருளைப் பற்றி ஆராய்ந்து, அதன் உண்மைப் பொருளை உணர்வதுதான் அறிவாகும்!!

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவுகுறள்

4 எந்த ஒரு செயலையும் செய்ய முற்படும்போது அதனைப் பற்றி நன்கு ஆராய்ந்து.தகுதியான ஒருவனிடம் ஒப்படைக்க , வேண்டும்
அதாவது, இந்த, செயலை ,இப்படிப் பட்ட வழிகளின் மூலமாக,
இவன், செய்து முடிக்க வல்லவன் என ஆய்ந்து,அறிந்து அச்செயலை
அவனிடத்தில் விட வேண்டும்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்- குறள்


5 மாண்பு மிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு வாழ்த்தும் வேண்டுகோளும்!

ஐயா!
வரலாற்று ,சிறப்பு மிக்க வெற்றி பெற்று, பதவி
ஏற்றுள்ள தங்களை, வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்! அத்துடன்,
இப் புலவனின் வேண்டு கோளாக ,ஒன்றை உங்களிடம் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்

திருமிகு, இராஜீவ் காந்தி படுகொலை பற்றிய வழக்கில்
குற்றவாளிகளாக கருதப்பட்டு ,பிறகு உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்
தமிழக ,மாண்பு மிகு முதல்வர் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட
எழுவரையும் முந்தைய மத்திய அரசு தடை விதித்து நிறுத்தி வைத்துள்ளது. இது, முறையற்ற , நியாமற்ற செயலாகும் . ஆகவே
தாங்கள் அருள் கூர்ந்து எழுவரையும் விடுதலை செய்ய , ஆணை யிட வேண்டுகிறோம்!

புலவர்  சா  இராமாநுசம்




-



15 comments :

  1. ஆழமான சிந்தனையுடன் கூடிய
    அவசியமான வேண்டுகோள்
    பகிர்வுக்கு பதிவர்கள் சார்பாக
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. யார் சொன்னார்கள் என்பதை மறந்து என்ன சொன்னார்கள் என்பதை மட்டும் நினைத்தால் ? நமக்குள் ஜாதிமதசண்டைகள் இருக்காது ஐயா நல்ல கருத்தை முன்வைத்துள்ளீர்கள் அரசு செவிகொடுக்கும் என நம்புவோமாக....
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  3. சுருங்கச் சொல்லலி விளங்கவைக்கும் வார்த்தைகள்! (த.ம.2)

    ReplyDelete
  4. குறளுடன் சிந்தனை விளக்கம் அருமை.. தமிழர் விடுதலைக்கு பிரமருக்கு வேண்டுகோள், வரவேற்கிறேன்...

    ReplyDelete
  5. குறளும் விளக்கமும் பயனுள்ளதாய் இருக்கிறது

    ReplyDelete
  6. குறளோடு ஒவ்வொரு சிந்தனைகளும் அருமை... சிறப்பு ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. தமிழரின் வீழ்ச்சிக்கு
    ஒற்றுமை இல்லாமையே!

    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete
  8. குறளோடு ஒன்றிய சிந்தனை அருமை ஐயா
    தம 7

    ReplyDelete
  9. தந்தையர் தின வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  10. முகநூலில் பகிர்ந்து கொண்டவற்றை இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    குறள் விளக்கம் உங்கள் வார்த்தைகளில்.... மிக அருமை.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...