Sunday, August 24, 2014

காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாவிரதம்!


காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாவிரதம்!

உண்ணாமல் இருக்கின்றார் ஒருவர் இங்கே
உயிர்நாளும் ஊசலாட காண்பார் எங்கே?
மண்ணாள வந்தோரோ மாற மாட்டார்
மதுவிலக்கு கொண்டுவர திட்டம் தீட்டார்!
எண்ணாது எதற்காக விரதம் ஐயா
இருக்கின்றீர் கைவிட வேண்டும் ஐயா!
கண்ணான ஓருயிரும் போகும் முன்னே
கருணைவிழி திறக்காதா ? விளைவு என்னே!

கரம்குவித்து வேண்டுகிறோம் முடித்துக் கொள்வீர்
காந்தீய வாதிநீர் ! ஒருநாள் வெல்வீர்!
அறவழியில் போராட்டம் போதும் இதுவே
அண்ணல்வழி கொண்டீர்கள் ஒழியும் மதுவே!
தரமழிக்கும் குடிப்பழக்கம் ஒழியும் நாளே
தமிழ்நாட்டுத் தாய்குலமே வாழும் நாளே!
சிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும்!
சிந்தித்து கைவிடவே வேண்டும் வேண்டும்!

புலவர் சா இராமாநுசம்

16 comments :

  1. உங்கள் கோரிக்கை வெற்றி பெறட்டும் !
    மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கும் அரசு என்று மது விலக்கை அமுல் படுத்துமோ ?
    த ம 1

    ReplyDelete
  2. உங்கள் கவலையில் நியாயம் இருக்கிறது.

    ReplyDelete
  3. நியாயமான கோரிக்கை ஐயா.

    ReplyDelete
  4. நியாயமான கோரிக்கை ஐயா
    வெற்றி பெறட்டும்

    ReplyDelete
  5. உங்கள் கோரிக்கை நியாயமானது ஐயா...

    ReplyDelete
  6. தங்களின் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நாமும்
    உறுதிகொள்கிறோம் ஐயா !

    ReplyDelete
  7. உண்ணா நோன்பின் மகத்துவம் அறியாதவர்கள்
    அதிகாரத்தில் இருக்கும் காலம்
    தங்கள் வேண்டுகோள் மிகச் சரியானது
    பகிர்வுகும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. உண்ணாவிரதம் தானே சுதந்திரம்ப் எற்றுத் தந்தது! தங்கள் வேண்டுகோள் பூர்த்தியாக வேண்டுகின்றோம்!

    ReplyDelete
  9. சிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும்!
    சிந்தித்து கைவிடவே வேண்டும் வேண்டும்

    உண்ணா விரதத்தைத் தானே கைவிட சொல்கிறீர்கள்....?

    ReplyDelete
  10. அறவழியில் போராட்டம் போதும்....

    உண்மை தான்
    கடைகளை அடித்துத் துவைத்தாலே போதும் போதும் என்று படையுங்கள் புலவர் ஐயா.

    ReplyDelete
  11. தரமழிக்கும் குடிப்பழக்கம் ஒழியும் நாளே
    தமிழ்நாட்டுத் தாய்குலமே வாழும் நாளே!//உண்மைதான் அய்யா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...