Saturday, August 30, 2014

வேங்கடவன் நினைவு! விளைவு! வேண்டுதல் புனைவு!

இன்று சனிக்கிழமை அல்லவா...!வேங்கடவன்  நினைவு!


ஏழுமலை வாசா எனையாளும் பெருமானே
எண்ணற் றோர் பலர் கூடி-நாளும்
வாழும் வழிநாடி வருகின்றார் உனைத் தேடி
வரிசையிலே நிற்பதும்! காணக்கண் -கோடி
சூழும் இடர்தம்மை சுடர்கண்ட பனியாக்கி-வரும்
சோதனைகள் இல்லாது சுகமாக அருள்நோக்கி
பாழும் மனமெல்லாம் பதப்படுத்த தூண்டுகிறேன்
பரந்தாமா !உன்பாதம் பணிந்துநான் வேண்டுகிறேன்

புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. வேங்கடவன் மிக பிஸி. அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து அவசர அவசரமாக இரண்டடுக்கில் பக்தர்களை டிஸ்போஸ் செய்து கொண்டிருக்கிறார். :)))))

    ReplyDelete
  2. வேங்கடவன் அருளாலே வேண்டும் வரம் யாவும் கிட்டட்டும்
    ஐயா !..
    தங்களின் அன்பு மகளின் ஒரு சின்ன வேண்டுகோள்
    நேரம் கிடைப்பின் இவ்விரு கவிதைகளுக்கும் தங்களின்
    இனிய நற் கருத்தினால் சிறப்புச் சேர்க்க அழைக்கின்றேன்

    http://rupika-rupika.blogspot.com/2014/08/2014.html

    http://rupika-rupika.blogspot.com/2014/08/2014-2.html

    ReplyDelete
  3. வேங்கடவன் அருள்வார் ஐயா!

    ReplyDelete
  4. வேங்கடவன் அருள் பெற்று வெல்லுங்கள் அனைத்தையும்.
    அருமையான கவிதை ..வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. வேங்கடவன் அருள்வார்
    வேண்டியதைத் தருவார்
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. வேங்கடவன் அருள் கொடுப்பார் ஐயா...
    கவிதை நன்று.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...