Monday, February 23, 2015

முகநூல் துளிகள்!





அம்பு வடிவில் நேரானதாகத் போன்றினாலும் செயலோ கொடிது! யாழ் வளைவினை உடையதாக் தோன்றினாலும் இனிய இசையைத் தரும்! ஆகவே மக்களின் செயலைக் கண்டே நாம் பழக வேண்டும் உருவு கண்டு ஏமாறக் கூடாது

தவவேடமணிந்து கொண்டு அவ்வேடத்திற்கு மாறாக பிறர் அறிய இயலாதவாறு தவறுகளைச் செய்பவன் ,செயலானது , பசு ஒன்று , புலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வதற்கு ஒப்பாகும்

வழுக்கு நிலத்தில் நடப்பவனுக்கு உதவுகின்ற ஊன்றுகோல் போல,ஒருவன் தன் வாழ்க்கைப் பாதையில் பதுகாப்பாகப் போக
கற்ற ஒழுக்கமுடையவர் கூறும் அறிவுரை ஊன்று கோலாகப் பயன்படும்

இல்லற வாழ்க்கையில் அதிக ஆதிக்கம் செலுத்துவது எதுவாக இருக்க வேண்டும் அன்பா அறிவா என்றால் அன்பாகத்தான் இருக்க வேண்டும் ஏனென்றால், அன்பு அனைத்தையும் அரவணைத்துச் செல்லும், அறிவு எதையும் ஆய்வு செய்யும் தன்மையுடையது பிரித்துப் பார்க்கும். அதனால் இல்லறம் பாதிக்கப் படும் என்பதே

மற்றவர் உரிமையைப் பறிப்பது என்பது மன்னிக்க முடியாதக் குற்றமாகும்! அது போலவே நம் உரிமைப் பறிபோவதைத் தடுக்காமலோ அல்லது, பார்த்துக் கொண்டுருப்பதோ பெரும் குற்றமாகும்!

புலவர்   சா  இராமாநுசம்

4 comments :

  1. சிந்தனைத் துளிகள் அருமை ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. துளிகள் ஒவ்வொன்றும் அமுதம் ஐயா
    நன்றி
    தம 2

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.
    எல்லாம் சிந்தனை முத்துக்கள் அருமையாக உள்ளது த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஒவ்வொன்றும் முத்துக்கள் ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...