Saturday, June 27, 2015

ஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய ஏற்றவழி காண்பாரா!? மத்தியில் கேட்டே!


ஓராண்டு ஓடியது ஊழல் இல்லை-என்றே
ஒலித்திட்ட குரல்கூட அடங்க வில்லை-அதற்குள்
யாராண்டால் என்னயிங்கே மாறி விடுமா- ஐயம்
யாவருக்கும் வந்துவிட நாறி கெடுமா- வரும்
பாராளும் மன்றத்திலே பற்றும் தீயா'ம்- தினப்
பத்திரிக்கை செய்திகளே முற்றும் நோயாம்-மேலும்
ஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய
ஏற்றவழி காண்பாரா!? மத்தியில் கேட்டே!


புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. கண்டு கொள்வதாய்த் தெரியவில்லை!

    ReplyDelete
  2. ஏற்ற வழி காண்பார் என எதிர்பார்ப்போம்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  3. நல்லதையே எதிர்பார்ப்போம் ஐயா...

    ReplyDelete
  4. என்ன நடக்கும் பார்ப்போம் ,ஐயா

    ReplyDelete
  5. களைய வழிகாண வாய்ப்பில்லை. பார்ப்போம்.

    ReplyDelete
  6. எங்கய்யா கண்டுக்கிறாங்க...
    இதெல்லாம் மாறாது...
    அருமை ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...