Thursday, April 28, 2016

வேண்டுவன் தினமும் கதிரோனே-இவ் வேதனை தாங்காயிம் முதியோனே!


ஆண்டுக்கு ஆண்டு இவ்வாறே –அனலை
அள்ளித் தந்தால் எவ்வாறே!?
ஈண்டே நாங்கள் வாழ்ந்திடவா –இல்லை
இன்னல் பட்டே மாயந்திடவா!
பூண்டும் கருகிப் போனதுவே –எரியும்
புகையில் நெருப்பென ஆனதுவே!
வேண்டுவன் தினமும் கதிரோனே-இவ்
வேதனை தாங்காயிம் முதியோனே!


புலவர் சா இராமாநுசம்

12 comments :

  1. ஆண்டுக்கு ஆண்டு போகிற நிலைமையை பாரத்தால் இன்னல் பட்டு மாய்ந்திடாத்தான் போல் இருக்கிறது அய்யா.....

    ReplyDelete
  2. பாவெல்லாம் பார்த்து மா வெள்ளம் தந்திடாதே! ஒரு மழையைத் தா... ஆனால் சிறு மழையாய்த் தா!

    :))

    ReplyDelete
  3. வெயிலோன் கொடுமை வேதனை தரும் ஒன்று!

    ReplyDelete
  4. வெயிலின் கொடுமை இங்கும் அப்படித்தான் ஐயா.

    ReplyDelete
  5. வெயிலின் கொடுமை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது ஐயா
    என்ன செய்வது மரங்களை எல்லாம் வெட்டி விட்டோம்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  6. நல்ல வேளை,நாம் வேலூரில் இல்லையென்று நினைக்க வேண்டியுள்ளது :)

    ReplyDelete
  7. வெயில் கொடுமை பயங்கரம்....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...