Saturday, September 17, 2016

இரங்கல் கவிதை!



கொள்ளிவைக்கப் பெற்றார்கள்! மகனே உன்னை-ஆனால்
கொள்ளிவைத்து கொண்டாயே நீயே தன்னை
அள்ளியுனை மார்பணைத்துப் பாலும் தந்த-இங்கே
அன்னையவள் வற்றாத கண்ணீ சிந்த
துள்ளுகின்ற வயதுனக்கே! துடிக்கும் தந்தை-உற்றார்
தோழரேன பல்லோரும் வெடிக்க சிந்தை
சொல்லுகின்ற ஒன்றல்ல விக்னேஷ்! துயரம்-உண்மை!
சொல்லியினி பயனில்லை திரும்பா உயிரும்!


புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. விவேகமற்ற வேகத்தில் செய்யும் செயல்களால் பாதிக்கப் படுவோர் உற்றாரே

    ReplyDelete
  2. ஐயா, இதனை முட்டாள்தனம் என்று கொள்ளலாமே.

    ReplyDelete
  3. இறந்து செய்த காரியத்தை அவர் இருந்து செய்து இருக்கலாம் !

    ReplyDelete
  4. இவ்வாறான இழப்புகள் இன்னும் தொடர வேண்டாம்
    அறியாமைகள் நீக்குவோம் அமைதியைக் காப்போம்

    ReplyDelete
  5. வேதனை ஐயா
    விவேகமற்ற செயல்தான் சந்தேகமேயில்லை

    ReplyDelete
  6. இது போன்ற பைத்தியக்காரத் தனங்களை இனி யாரும் செய்யக்க் கூடாது.அரசுயல் வாதிகளும் தன்னிலை மறக்கும்உ ணர்வுகளை தூண்டும் வகையில் பேசுதல் கூடாது

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...