Saturday, April 22, 2017

கற்றாரின் நற்சொல்லை ஏற்க வேண்டும்!



கற்றாரின் நற்சொல்லை ஏற்க வேண்டும்
கல்லாரைக் கற்றவராய் மாற்ற வேண்டும்
பெற்றாரைத் தெய்வமெனப் வணங்க வேண்டும்
பிறர்நோக பேசாது இருத்தல் வேண்டும்
உற்றாரை அரவணைத்து வாழ்தல் வேண்டும்
ஊர்மெச்ச நல்லவராய் நடத்தல் வேண்டும்
அற்றாரின் அழிபசியைப் போக்க வேண்டும்
ஆணவத்தை அடியோடு நீக்க வேண்டும்


புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. இதுலாம் நடக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.

    ReplyDelete
  2. இன்றைய மாணவர்களுக்கு நல்லதொரு வரிகள் ஐயா
    த.ம.2

    ReplyDelete
  3. கற்றாரின் நற்சொல்லை ஏற்க வேண்டும்
    கல்லாரைக் கற்றவராய் மாற்ற வேண்டும்
    நாளை
    நம்மவரும் நம்நாடும் முன்னேற வேண்டும்

    ReplyDelete
  4. வேண்டாம் எட்டும் அருமை அய்யா :)

    ReplyDelete
  5. இவ்வளவு நீதிபோதனைகளை எங்களால் கடைப்பிடிக்க முடியுமா ஐயா?

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...