Wednesday, April 26, 2017

எத்தனை நாட்களோ இணைப்பு நாடகம்-நாளும் எழுதிட முரண்பட செய்திகள் ஊடகம்



எத்தனை நாட்களோ இணைப்பு நாடகம்-நாளும்
எழுதிட முரண்பட செய்திகள் ஊடகம்
பித்தரைப் போல பேசுவர்! பலரும்-ஏனோ
பின்னர் அதனை மாற்றுவர் சிலரும்
சித்தம் கலக்கும் செய்திகள் செப்பிட- சற்றும்
செயல்படா அரசுக்கு நிகரென ஒப்பிட
இத்தரை தன்னில் எதுவுமே  இல்லை-அந்தோ
இறைவா காக்க வந்திடு ஒல்லை!


புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. இறைவன் நினைத்தால்தான் மாற்றம் நிகழும் ஐயா
    த.ம.1

    ReplyDelete
  2. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    விஷயம் மனிதர்கள் கையைத்
    தாண்டிய கதைதான்
    பார்ப்போம்,...வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete

  3. சிந்தித்துப் பார்க்கிறேன்
    ஆனால்,
    அவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லையே!

    ReplyDelete
  4. என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம் ஐயா

    ReplyDelete
  5. இவர்களின் சுயநல அரசியலால் மக்கள் பணிகள் எதுவும் நடக்கவில்லை:)

    ReplyDelete
  6. தினகரன் உள்ளே போய்விட்டாரே! ஏதாவது நடக்கும் என்று நம்பலாம்.
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  7. என்ன நடக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் குழப்பம் தான்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...