Tuesday, September 26, 2017

நேற்றுவரை முன்னிருந்தார் போன வழியே – ஐயா நீங்களுமே.! போவதென்ன!? வருதல் பழியே


மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி
மாறினாலும் இதுவரையில் மாறாத் தொல்லை
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்ன தெல்லாம் –மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம்
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும் போக்கே –எடுத்து
துல்லியமாய் காட்டுதந்தோ உற்று நோக்க
நேற்றுவரை முன்னிருந்தார் போன வழியே – ஐயா
நீங்களுமே.! போவதென்ன!? வருதல் பழியே


புலவர்  சா இராமாநுசம்

11 comments :

  1. அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே குட்டை, ஒரே மட்டை.

    தம முதலாம் வாக்கு.

    ReplyDelete
  2. இவர்களின் கொள்ளைக்கு ஒரு உதாரணம் ,பெட்ரோல் தினசரி விலையேற்றம் :)

    ReplyDelete
  3. தவறுகளின் தொடக்கம் மக்களிடமே ஐயா...

    ReplyDelete
  4. மாற்றம் என்ன வேண்டும் என்றும் எடுத்துரைத்தல் நன்று - அவை
    போற்றும்படி அமைந்துவிட்டால் பிறக்கும் விடிவு இன்று.


    கோ

    ReplyDelete
  5. எல்லாம் குட்டையில் ஊறிய மட்டைகள்தான் ஐயா!! தமிழ்நாட்டின் போக்கும் சரியில்லை...

    தம 3

    ReplyDelete
  6. சிஸ்டம் சரியில்ல

    ReplyDelete
  7. வணக்கம் புலவர் ஐயா !

    அரசியலில் இதுவொன்றும் புதிது இல்லையே ....

    தம +1

    ReplyDelete
  8. அட்டமத்துச் சனி என்னுடையது:) ஹா ஹா ஹா 8ம் நம்பர்:).

    ReplyDelete
  9. சிஸ்டத்தை மாற்றுவதுதான் ஒரே வழி!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...