Friday, February 23, 2018

ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!




ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில்
உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!
நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று
நோக்கமின்றி சொன்னபடி அளித்தல் கண்டே!
நாட்டுக்கே நலம்செய்யும் ஆட்சி வருமா-என்றே
நல்லோர்கள் ஒதிங்கினால் நன்மை தருமா!
மாட்டுக்கு மூக்கணாங் கயிற்றை போன்றே-நீரும்
மனம்வைத்தால் மாறும்! வரலாறு சான்றே!



புலவர் சா இராமாநுசம்

3 comments :

  1. மாற்றம் வரும் ஐயா.

    ReplyDelete
  2. இன்னும் ஒரு நூறு வருடம் ஆனால் 'மாற்றம் வரும் வாய்ப்பு வருமா' என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கலாம்!

    ReplyDelete
  3. ஓட்டளிப்பளிப்பவனுக்கு உரிமை ஒன்றுமில்லை
    நோட்டுள்ளவனுக்கே அரசுரிமை என்றானது
    நோட்டோவோ வெத்துவேட்டு கணக்கானது
    கையில் கரையிடுவது ஜனநாயகமென்றானது

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...