Monday, December 5, 2011

பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்


தலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால்
  தடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால்
அலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம்
  அழிகின்ற நிலைதன்னைக் காணாயோ கொஞ்சம்
இலைமீதே தத்தளிக்கும் நீர்த் துளியேபோல
  என்னுயிரும் தள்ளாடி நீங்குமெனில் சால
நிலைமீறிப் போவதற்குள் நின்றென்னைப் பாராய்
  நீங்காத வேதனையை நீமாற்ற வாராய்!

துள்ளுகின்ற காரணத்தால் கரையடைத்த மீனோ
  துள்ளியுந்தன் இருவிழியில் புகலடைந்த தேனோ
தெள்ளுகின்றத் தீந்தமிழே தேவையில்லை வீணே
  தேன்மொழியே தக்கதல்ல தவிர்திடுவாய் நாணே
எள்ளுகின்ற நிலையெனக்கு நீதருதல் நன்றோ
  என்னிடத்து உன்கருத்தை அறிவதுதான் என்றோ
உள்ளமதைக் காட்டயெனில் ஓரவிழி போதா
  உரைத்திடுவாய் கனியிதழைத் திறப்பதென்ன தீதா

இடைகாட்டி மின்னலதைப் போட்டியிலே வென்றே
  இருவென்று சொன்னாயோ விண்ணினிலேச் சென்றே
படைகூட்டிப் போர்த்தொடுக்கப் பழிதனிலே நின்றே
  பளிச்சிட்ட மின்னலதோ பதுங்குவதேன் இன்றே
நடைகாட்டிப் பெருமையுற அன்னமெனும் புள்ளும்
  நாடியுனை அடைந்திட்டால் நாணமிகக் கொள்ளும்
கடைகூட்டிக் கருமணியால் காணிலது போதும்
  கற்பனையில் நாளெல்லாம் இன்பம்அலை மோதும்!

குளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்
   குடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்
உளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்
   உணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்
அளக்கரிய என்அன்பை  அறிவதுதான் என்றோ
   அரிவையுந்தன் ஆசைகளை மறைப்பதுவும் நன்றோ
விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
   விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்

தேய்வதென்ன வளர்வதென்ன தெரிவதென்ன விண்ணில்
   தெரிவையுந்தன் முகத்தினிக்கே ஒப்பெனவே எண்ணில்
ஓய்வதென்னத் திங்களுக்கு ஒருமுறைதான் மண்ணில்
   ஒளிதன்னைப் பாச்சுகின்ற அம்புலிதான்  கண்ணில்
ஆய்வதென்ன அறைவதென்ன ஒப்பிலையாம் என்றே
   அழிவதுமே வளர்வதுமே ஆனநிலை இன்றே
பாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம்
   பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்
         
                        புலவர் சா இராமாநுசம்
  
         கல்லூரியில் படித்த போது எழுதியது
        
  

38 comments :

  1. ம்ம்...காதல் கவிதை.ரசிச்சு ரசிச்சு அத்தனை அழகா வர்ணிச்சிருக்கீங்க !

    ReplyDelete
  2. ////குளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்
    குடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்
    உளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்
    உணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்
    அளக்கரிய என்அன்பை அறிவதுதான் என்றோ
    அரிவையுந்தன் ஆசைகளை மறைப்பதுவும் நன்றோ
    விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
    விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்
    ////

    அழகான ரசனையுடன் கூடிய கவிதை பாஸ்

    ReplyDelete
  3. இப்படி ஒரு காதல் ரசம்
    இதுவரை பருகியதில்லை.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  4. இவ்வளவு அருமையான வரிகள்...மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது...

    இப்படிதான் உங்களின் கவிதைகளை படித்துவிட்டு அதன் அழகில் அசந்து என்ன பின்னூட்டம் எழுதுவது என்ற யோசனையிலேயே நேரம் கடந்து விடுகிறது...
    :)

    பின்னூட்டம் இட மறந்தாலும் கவிதைகளை படித்து ரசித்துவிட்டு செல்ல தவற மாட்டேன்.

    இந்த கவிதையும் வழக்கம் போல என்னை இழுத்து பிடித்து வைத்து கொள்கிறது.

    :))

    உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. PUTHIYATHENRAL said

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. கவி அழகன் said...


    நன்றி தம்பீ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. ஹேமா said...



    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. நண்டு @நொரண்டு -ஈரோடு said



    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. அருமையான கவிதை.... இளமையில் எழுதியதில் வரிகள் சூப்பர்.... இன்னும் கலக்சன்ஸ் இருக்கா?



    வாசிக்க:
    நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

    ReplyDelete
  10. காதல் ரசம் சொட்டோ சொட்டுன்னு சொட்டுதே அருமை...!

    ReplyDelete
  11. //விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
    விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்//

    புலவர் ஐயா,

    அருமையான காதல் கவிதை.

    ( கல்லூரி என்ற குறிப்பு - சகலத்தையும்- சொல்லிற்று.)

    ReplyDelete
  12. K.s.s.Rajh said...

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. கோகுல் said..


    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. Kousalya said..

    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. தமிழ்வாசி பிரகாஷ் said..


    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. திண்டுக்கல் தனபாலன் said


    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. MANO நாஞ்சில் மனோ said

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. சத்ரியன் said..


    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. முனைவர்.இரா.குணசீலன் sai


    நன்றி முனைவரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. நினைத்தேன்.கல்லூரியில் படிக்கும்போதுதான் எழுதியிருக்க வேண்டும்.நன்று.

    ReplyDelete
  21. இளமையில் எழுதிய காதல் கவிதை வரிகள் அருமை...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. கல்லூரி நாட்களின் காதல் கவிதை அருமை!

    ReplyDelete
  23. அருமையான கவிதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  24. shanmugavel said...

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. ரெவெரி said...

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. ரெவெரி said...

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. சென்னை பித்தன் said...

    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. hnavel said...


    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. மனதின் கண்ணாடி இந்த கவிதை
    அருமை ஐயா

    ReplyDelete
  30. கல்லூரி நாட்கள் அப்போதும் இப்போதும் எப்போதும் இனிமை
    அருமை ஐயா ...

    ReplyDelete
  31. அருமையான கவிதை.

    please read my blog www.rishvan.com and leave your comments.

    ReplyDelete
  32. வார்த்தைகள் வடித்த சிற்பங்களாய்
    மின்னுகிறது புலவரே...
    அருமை.. அருமை..

    ReplyDelete
  33. வணக்கம் ஐயா,
    அவள் அழகை ரசிக்காதோர் எல்லாம் துன்பம் மிகுந்து வாடுவோரே என்பதனை அழகிய கவியில் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...