Friday, January 13, 2012

தைமாத முதல்நாளே புத்தாண் டாகும் !


தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!
      தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்
பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்
      புரியாமல் வாழ்த்தினைச் சொல்லித் தந்தோம்
 ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
      அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
 மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
       மேதினி உணர்ந்திட இங்கே  விண்டோம்

 காட்டைத் திருத்தியே பயிரு மிட்டான்-நெல்
        கதிர்கண்டு நம்முடை உயிரை மீட்டான்
 வீட்டை மகிழ்ச்சியில் ஆழ்தி விட்டான்-பயிர்
       விளைந்திட அறுவடைப்   பொங்க லிட்டான்
 மாட்டுக்கும் பொங்கலே வைத்தி டுவான்-நல்
       மனித நேயத்துக்கே வித்தி டுவான்
 பாட்டுக்கே அன்னவன் உரிய  வனாம்-தமிழ்ப்
       பண்பாட்டின் சின்னாய் திகழ்ப வனாம்!
      
 உதிக்கின்ற கதிரவன் இறைவன் என்றே-அவன்
      உணர்ந்தவன் அதனாலே பொங்க லன்றே
 துதிக்கின்றான் வாசலில் பொங்கல் இட்டே-இது
      தொடர்கதை அல்லவா அன்று தொட்டே
 கதிகெட்டு போவோமே உழவன் இன்றேல்-அவன்
      கைகள் முடங்கிடின்  எதுவு மின்றே
 மதிகெட்டு இனிமேலும் உழவன் தன்னை-அரசு
       மதிக்காமல் மிதித்தாலே நிலமை என்னை?

 புயலாக மழையாக இயற்கை சீற்றம்-வந்துப்
      போவதால் அன்னவன் வாழ்வில் ஏற்றம்
 இயலாது! இயலாது !கண்டோ  மன்றே-அந்த
        ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
  முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
       முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
  பயிலாதப் பெரும்பான்மை  மக்க ளய்யா-உடன்
        பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!

        அன்பின் வழிவந்த வலையுலக நெஞ்சங்களே!
         உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளாம்
         நம், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! நன்றி!

                                 புலவர் சா இராமாநுசம்

      

40 comments :

  1. அருமை கவிதை.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பொங்குகின்ற பொங்கலைப் போல
    மகிழ்ச்சி என்றும் நிலைத்து பொங்கட்டும்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
    அன்பிற்கினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  6. பொங்க்ல் திரு நாள் சிறப்புக் கவிதை
    அருமையிலும் அருமை
    பகிர்வுக்கு நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய பொங்கல் கவிதை பிரமாதம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. dhanasekaran .S said...

    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. stalin wesley said...


    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. மகேந்திரன் said
    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. தமிழ்வாசி பிரகாஷ் said


    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. Ramani said...



    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. கணேஷ் said...


    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  15. உழவர் பாட்டைப் பாட்டால் உரைத்து அவர் பெருமை பகன்ற தங்களுக்கு நன்றியும் பாராட்டும்.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தைத்திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் !

    உண்மைவிரும்பி.
    மும்பை

    ReplyDelete
  17. வணக்கம் ஐயா,

    தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. Azhagu Kavithai. Thangalukkum Thangal Kudumpaththaarukkum en iniya Pongal Vaalthukkal and Tamil Puththaandu Vaalthukkal!

    ReplyDelete
  19. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    தமிழ்புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வரும், அப்போது தமிழ் புத்தாண்டு கூறுவேன்.

    ReplyDelete
  20. நண்டு @நொரண்டு -ஈரோடு said

    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. கீதா said...

    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. எனது கவிதைகள்... saidபாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. கோகுல் said...
    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. துரைடேனியல் said...


    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. ராவணன் said...


    நன்றி!நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. அழகு...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  27. ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
    அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
    மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
    மேதினி உணர்ந்திட இங்கே விண்டோம்


    அருமை அருமை அருமை அய்யா
    தமிழால் தமிழர் தம்
    உரிமையை உரக்க உறைக்க சொன்னீர்கள்

    ReplyDelete
  28. இனிய பொங்கல் நன்நாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  29. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..

    ReplyDelete
  30. விருத்தம் சிறப்பு அய்யா.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. ரெவெரி said...


    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. A.R.ராஜகோபாலன் said...



    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. ஹேமா said...



    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. அப்பு said...

    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. சி.கருணாகரசு said


    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  37. தை தான் தமிழின் முதல் நாளென்று சொல்ல நாம் அதிகமாகவே போராடவேண்டியிருக்கிறது. வருடம் தோறும் நாம் சொல்லச் சொல்ல இது எதிர்காலத்தில் வழக்கில் வந்துவிடும். தங்களது இந்த கவிதையை எனது முக நூலில் வெளியீடுகிறேன் ஐயா...!

    ReplyDelete
  38. Rathi said...


    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  39. தோழன் மபா, தமிழன் வீதி said...


    பாராட்டிய,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...