Sunday, March 31, 2013

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!



அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!

இன்று தமிழ்நாடுயெங்கும், மாணவரும், சமூக அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும், பொதுமக்களும தனிஈழம் வேண்டி போராடி வருகின்றனர். இதுபோது வலைவழியும் ,முகநூல், கூகுல்பிளஸ், இன்னும் இது போன்ற பல் வகையிலும் எழுதுகின்ற பதிவர்களாகிய நாமும் நம் பங்கை ஆற்ற வேண்டாமா!

ஒருநாள் உண்ணா விரதமோ, ஆர்பாட்டமோ நேரமும் இடமும் நாளும் குறித்து திட்ட மிட்டு கூடி அறிவித்து ஆவன செய்வது நலமல்லவா!

சென்னையும் அதனை சுற்றியுள்ள பதிவர்களும்
உடன் இச்செயலில் ஈடுபட்டால் , பிறகு ஆங்காங்கே உள்ள மற்றவர்களும் செயல் படுவார்கள் என்பது என் வேண்டுகோளாகும்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் வேண்டுகிறேன்


                               புலவர்  சா இராமாநுசம்

13 comments :

  1. அய்யா வழியில் அறப்போராட்டம் ஆரம்பம் அனைவரும் வந்து ஆதரவு தாரீர் என அய்யா அழைக்கிறார்.
    "எங்கெங்கு காணினும் எல்லொரும் தமிழனடா" என்று சொல்லும் அனைத்து உள்ளங்களும் "தமிழ்ச் சங்கே முழங்கு "என கூடி முழங்க சென்னை நோக்கி வாருங்கள் செழுமையான தமிழ் உணர்வைநேரில் வந்து காணுங்கள் '

    ReplyDelete
  2. என்று எங்கு எப்போது என சொல்லுங்கள்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  3. கண்டிப்பாக செய்யலாம் அய்யா...

    பொதுவான ஒரு பிரச்சனைக்கு எல்லா தரப்பில் இருந்தும் ஆதரவு வந்தால் தான் அது எட்டாத செவிகளுக்கும் எட்டும்...


    மார்ச் 20 அன்று எங்கள் பகுதியில் (தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை) நடந்த உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்டு எங்கள் பகுதியில் இருந்து எதிர்ப்பை தெரிவித்தோம்

    ReplyDelete
  4. ஆதரவு என்றும் உண்டு ஐயா...

    ReplyDelete
  5. ஆதரவு என்றும் உண்டு அய்யா

    ReplyDelete
  6. ஐயா... உங்கள் உள்ளார்த்தமான உன்னதமான உணர்விற்கு என் பணிவான வணக்கம்.

    நிச்சயம் என் ஆதரவும் என்றும் உண்டு ஐயா.
    நான் இருப்பது ஜேர்மனிநாட்டில். நீங்கள் ஒன்றுகூடும் தருணம் அன்றைய நாளில் இருக்குமிடத்திலேயே உணர்வுபூர்வமாக உங்களுடன் இணைந்துகொள்வேன்.
    ஒரு ஈழத்துத் தமிழச்சியாக என் உணர்வுகளும் உங்களுடன் என்றும் ஒன்றாக இருக்கும்...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...