இடையில், உள்ளது  ஒருநாளே -நமக்கு
   இருப்பது 
தேர்தலில்!   வருநாளே!
படையுள் வீரன்  கைவாளே –என
   பயன்தர, ஓட்டு  அந்நாளே
தடையில் ! சென்றே  போடுங்கள்! –உணர்ந்து
    தக்கவர் 
எவரென  தேடுங்கள்
கடையில்  விற்கும் 
பொருளல்ல- எதிர்
   காலத்தின் விதியாம் அதைச்சோல்ல!
ஓட்டுப்  போடுதல் 
நம்கடமை –அது
   ஒன்றே இன்று 
நமதுடமை!
காட்டுத்  தர்பார் 
ஒழியட்டும்!-இலஞ்ச
    கயமைக் குணமே  அழியட்டும்!
நாட்டு  நடப்பை 
மாற்றிடவே –வெளி
   நாடுகள் 
நம்மைப் போற்றிடவே !
கேட்டு மகிழச்  செய்வோமே –பெற்றக்
    கேடுகள் 
நீங்க  உய்வோமே!
புலவர்  சா  இராமாநுசம் 


// படையுள் வீரன் கைவாளே //
ReplyDeleteஅருமை ஐயா...
நம் வோட்டைப் பெற்று ஆட்சிக்கு வருவோர் செய்யும் ஊழல்களைப் பார்த்தால் நம் கை வாளால் நம் கண்ணையே குத்திக்கற மாதிரி இருக்கே அய்யா !
ReplyDeleteத ம 2
கடமையை செய்வோம்.
ReplyDeleteகடமையை செய்து உரிமையைக் கேட்போம்
ReplyDeleteஇந்நாளில் எங்கள் கடமை எதுவென மிக அழகாகவும் தெளிவாகவும்
ReplyDeleteஎடுத்துரைத்த கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .
அருமை ஐயா! கட்டாயம் வாக்கிடுவேன்! நன்றி!
ReplyDeleteநமது கடமையா செய்தாகி விட்டது. வெல்பவர்கள் அவர்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும்
ReplyDeleteஓட்டுப் போடுவது நம் கடமை.... உண்மை தான் ஐயா.
ReplyDelete