Tuesday, April 22, 2014

ஓட்டுப் போடுதல் நம்கடமை –அது ஒன்றே இன்று நமதுடமை!





இடையில், உள்ளது  ஒருநாளே -நமக்கு
   இருப்பது  தேர்தலில்!   வருநாளே!
படையுள் வீரன்  கைவாளே –என
   பயன்தர, ஓட்டு  அந்நாளே
தடையில் ! சென்றே  போடுங்கள்! –உணர்ந்து
    தக்கவர்  எவரென  தேடுங்கள்
கடையில்  விற்கும்  பொருளல்ல- எதிர்
   காலத்தின் விதியாம் அதைச்சோல்ல!

ஓட்டுப்  போடுதல்  நம்கடமை –அது
   ஒன்றே இன்று  நமதுடமை!
காட்டுத்  தர்பார்  ஒழியட்டும்!-இலஞ்ச
    கயமைக் குணமே  அழியட்டும்!
நாட்டு  நடப்பை  மாற்றிடவே –வெளி
   நாடுகள்  நம்மைப் போற்றிடவே !
கேட்டு மகிழச்  செய்வோமே –பெற்றக்
    கேடுகள்  நீங்க  உய்வோமே!

புலவர்  சா  இராமாநுசம்

  

8 comments :

  1. // படையுள் வீரன் கைவாளே //

    அருமை ஐயா...

    ReplyDelete
  2. நம் வோட்டைப் பெற்று ஆட்சிக்கு வருவோர் செய்யும் ஊழல்களைப் பார்த்தால் நம் கை வாளால் நம் கண்ணையே குத்திக்கற மாதிரி இருக்கே அய்யா !
    த ம 2

    ReplyDelete
  3. கடமையை செய்து உரிமையைக் கேட்போம்

    ReplyDelete
  4. இந்நாளில் எங்கள் கடமை எதுவென மிக அழகாகவும் தெளிவாகவும்
    எடுத்துரைத்த கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

    ReplyDelete
  5. அருமை ஐயா! கட்டாயம் வாக்கிடுவேன்! நன்றி!

    ReplyDelete
  6. நமது கடமையா செய்தாகி விட்டது. வெல்பவர்கள் அவர்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும்

    ReplyDelete
  7. ஓட்டுப் போடுவது நம் கடமை.... உண்மை தான் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...