Showing posts with label என் முகநூல் பதிவுகள். Show all posts
Showing posts with label என் முகநூல் பதிவுகள். Show all posts

Saturday, May 27, 2017

என் முகநூல் பதிவுகள்

உறவுகளே!
குரங்கு ஆப்பம் பங்கிட்ட
கதைபோல ஆகிவிடும், அண்ணா திமுகா வின், இரண்டு அணிகளின் எதிர் காலம்!

ஆலமரத்தின் விதை ,மிகவும் சிறியதாக இருந்தாலும் முளைத்து மரமாகி தழைத்தால்
பெரிய படையே அதன் நிழல் தங்கி ஓய்வு கொள்ள
முடியும்! ஆனால் பனை மரத்தின் விதை மிகப் பெரியதாக இருந்தாலும் முளைத்து மரமானால் அதன்
நிழலில் ஒருவர் கூட தங்க இயலாது ஆகவே நாம்
ஆலம் விதையாகத் தான் வாழ வேண்டும்!


ச என்ற எழுத்தில் தான்( பெயர் ) ஆரம்ப மாகிறது என்பதால் சந்தணமும் சாக்கடையும் ஒன்று என்றா
சொல்ல முடியும்? அப்படிதான் சில நிகழ்வுகள் நாட்டில் நடப்பதைப் பார்கும் போது எண்ணத் தோன்றுகிறது

கற்றலின் கேட்டல் நன்று,என்று
காது கேட்பவனிடம் ,சொல்வது
பலன் தரும்!! பிறவிச் செவிடனிடம் சொல்வதால்
பலன் உண்டா!

சொல்லுதல் எளிது! யாருக்கு!பிறருக்கு!
செய்வது அரிது! நமக்கு

அனைவருக்கும் நன்றாம் பணிவாக நடத்தல் என்றாலும்
செல்வர்கள் , அவ்வாறு நடந்தால் அதுவே அவர்களுக்கு
மேலுமொரு செல்வமாகும்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
பெய்யும் மழை என்பர்! ஆனால்
சென்னையில் மட்டும் மழை இல்லையே!
ஏன்? அப்போ!!!!!!!?

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, November 14, 2015

என் முகநூல் பதிவுகள்!




உறவுகளே வணக்கம்!
இடைவிடாது பெய்த கனமழையால் தமிழகத்தில் பல ஏரிகள் நிரம்பியும் வழிவதோடு உடைந்தும் போவதாகச். செய்திகள் வரும் நிலையில் சென்னக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள்( புழல்.பூண்டி.சோழவரம் செம்பரம்பாக்கம) மட்டும் நிரம்பாததோடு நான்கில் ஒருபங்கு அதாவது மாநகரின் மூன்றுமாத தேவைக்கு உரிய நீர்தான் மொத்தமாக வந்துள்ளதாகக்
குடிநீர் வாரியம் அறிவித்துள்ள செய்தி மிகவும் வேதனையானது! நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் ஏரிகள் நிரம்பா நிலைக்கு . யார்,என்ன காரணம் நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமப்பு செய்யப்பட்டுள்ளனவா!!!? அவ்வாறு இருந்தால் உடன் அவற்றை அகற்ற அதிகரிகளும் அரசும் செயல்பட வேண்டும்
மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடன் தலையிட்டு ஆய்வு செய்ய ஆணையிட வேண்டுகிறோம்!

உறவுகளே!இன்று பெய்யும் கடுமையான மழையினால் நாம் பெற்றுவரும் சேதங்கள் அனைத்தையும் பார்க்கும் போது வள்ளுவன் கூறிய குறள் தான் நினைவிற்கு வருகிறது! குற்றமோ, தவறோ, துன்பமோ எதுவானாலும் அது வருவதற்கு முன்
பாதுகாப்பினை தேடிக்கொள்ள வேண்டும் இலையென்றால்
எரியும் தீயின் முன்னால் வைக்கப் பட்ட வைக்கோல் போல எரிந்து விடும்
இதுபோலத்தான் இன்று தமிழக அரசு செய்து வரும் வெள்ள நிவாரண பணிகளின் நிலையும் உள்ளன!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர
வைத்தூறு போலக் கெடும்- குறள்

கரடு முரடான பாதையிலேயே நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்கு சமதரையிலே நடக்கும் போது மகிழ்ச்சி வரும். சமதரையிலேயே நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்கு கரடு முரடான பாதையிலேயே நடக்கும் போது துன்பம் தரும்! ஆனால் இரண்டு வழிகளிலும் நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்குப் பக்குவம் வரும்! நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் அமையும்! அமைய வேண்டும்

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, November 8, 2014

என், முகநூலில் வந்தவை ! வலையில் படிக்கத் தந்தவை !





வாள்முனைப் பெரிது என்றான் நெப்போ லியன்
பேனாமுனைப் பெரிது என்றான் வால்டேர்
அறிவு முனைப் பெரிது என்றார் பெர்னாட்சா
ஒழுக்கமே பெரிது என்றார் திருவள்ளுவர்
ஒழுக்கமில்லாத்தவன் கையில் உள்ள வாளும்
பேனாவும் அவனது அறிவும் பயனற்றதாகும்!

சிரியுங்கள் அது நெஞ்சின் இசை
சிந்தியுங்கள் அது ஆற்றலின் ஊற்று
படியுங்கள் அது அறிவின் வளர்ச்சி
உழையுங்கள் அது வெற்றியின் இரகசியம்
விளையாடுங்கள் அது இளமையின் கொடை!

கல்லில் உயிர் உறங்குகிறது
தாவரத்தில் உயிர் அசைகிறது
விலங்குகளில் உயிர் வெளிப்படுகிறது
மனிதனிடம் உயிர் வேலை செய்கிறது
மகானிடம் உயிர் பணி செய்கிறது

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...