Wednesday, November 18, 2015

மாண்பு மிகு முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்!


உறவுகளே வணக்கம்!
நான் முன்பே எழுதியதைப் போல இவ்வளவு மழை பெய்தும் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரிமட்டும் முழு அளவினை
எட்டவில்லை மற்ற ஏரிகள்( சோழவரம், பூண்டி, செம்பரம் பாக்கம்) நிரம்பியதோடு உபரி நீர் வெளியேறி வெள்ளச்சேதம் ஏற்படத்தியுள்ள செய்திகளை அனைவரும் அறிவீர்! இதனால் தெரிவது புழல் ஏரிக்கு நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளநிலைமை உள்ளங்கை நெல்லிக்கனி என்பதுபோல் தெளிவாகத் தெரிகிறது
ஆகவே எதையும் துணிவோடு செய்யக்கூடியவர் என பெயர் பெற்ற நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள், பழைய கோப்புகளை எடுத்து ஆய்வு செய்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும், யாரானாலும் எந்த கட்சி ஆனாலும் தயவு காட்டாமல் போர்கால அடிப்படையில் உடனடி அகற்ற நடவடிக்கையை எடுக்குமாறு வேண்டுகிறோம் இதுதான் உரிய தருணம் நாள் தள்ளிப் போனால் ஆறின சோறு ஆகிவிடும் மீண்டும் மீண்டும் வேண்டுகிறோம்! செய்வீகளா!

புலவர்  சா  இராமாநுசம்

22 comments :

  1. இவ்வளவு காலம் செய்யாதவர்கள் இனி செய்வார்களா? சந்தேகம்தான்!

    ReplyDelete
  2. செய்ய வேண்டும் ஐயா... நம்புவோம்...

    ReplyDelete
  3. மனம் இருந்தால் மாற்றம் வரும் ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  4. அய்யா பதில் தெரிந்தே கேள்வி கேட்பது.
    ஆசிரியர்களின் பணி.

    பதில் தெரியாவிட்டாலும் எதையாவது எழுதி மதிப்பெண் பெற முயல்வது மாணவனின் பாணி.

    பதில் தெரிந்தாலும் சொல்லாமல் நழுவுவது..?

    மற்றதை தாங்களே நிரப்பி தேர்ச்சிக்குறிய மதிப்பெண்ணை வழங்கிட
    வேண்டுகிறேன்...

    ReplyDelete
  5. செய்வார்களா? ஊஹூம்! தேர்தல் அறிக்கையில் கொள்வார்கள்.

    ReplyDelete
  6. காரணமானவர்களிடமே காரியம் ஆற்ற சொல்வது எந்தளவுக்கு நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கதவைதானே தட்டியாக வேண்டும்.
    த ம 7

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா

    நல்ல அறை கூவல்.. நடக்குமா..... நடந்தால் நல்லது... த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. செய்வீகளா? செய்வீகளா!?

    ReplyDelete
  9. இதை இவர்கள் செய்யும் நாள் வரும் ஆனால் .......

    ReplyDelete
  10. ஐயா வணக்கம் !

    அம்மாவே ஏண்டா இந்த மழை வந்து சோதனை செய்து என்று திட்டிட்டு இருப்பாங்க கடவுளை அவங்களாவது கவனிக்கிறதாவது ! ஆட்சிதான் முக்கியம் அழிவு ??????????????????

    ReplyDelete
  11. மேலும் ஒரு அழிவினைத் தடுக்க
    ஆக்கிரமிப்புகளை அகற்றியே ஆக வேண்டும்
    அகற்றப்படும் என் நம்புவோம்
    தம +1

    ReplyDelete
  12. செய்வார்களா...? செய்வார்களா...?
    சந்தேகம்தான் ஐயா...

    ReplyDelete
  13. செய்வார்களா? செய்தால் நல்லது.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...