Sunday, August 14, 2016

தமிழைக் காத்த கவிஞனவன் –ஏனோ தன்னைக் காக்க மறந்தானே


தமிழைக் காத்த கவிஞனவன் –ஏனோ
தன்னைக் காக்க மறந்தானே
அமிழ்தைத் தந்தவன் எதனாலே-நீங்கா
ஆழ்ந்த துயில்கொள பறந்தானே
இமையின் இருவிழி நீர்சிந்த –துடிக்கும்
இதயம் தாங்கா துயர் முந்த
எமையேன் மறந்தாய் குமாரநீ-முற்றா
இளந்தளிர் முத்து குமராநீ


புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. ஆமய்யா. தன்னைக்காக்க மறந்துவிட்டார்.
    ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  2. 'அழகே அழகே'
    'ஆனந்தயாழை மீட்டுகிறாய்'
    ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க
    பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்
    நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!
    ஆதலால்,
    ஒரு பாவலன் / கவிஞன்
    சாவடைந்ததாக வரலாறு இல்லையே!
    ஆயினும்
    நாமும்
    துயர் பகிருகிறோம்!

    ReplyDelete
  3. உயரப் பறக்க நினைத்தாய் ,பறந்து காட்டினாய் ,மகிழ்ந்தோம் !
    எட்ட முடியா உயரத்துக்கு சென்று விட்டாயே சென்று விட்டாயே ,என் செய்வோம் நாங்கள் ):

    ReplyDelete
  4. வணக்கம். நன்றி ஐயா!

    ReplyDelete
  5. அருமையான இரங்கற்பா....

    அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  6. நா.முத்துக்குமாருக்கு!

பெருங்கவி ஒருவனை
இன்று நாம் இழந்தோம்!
பெருமையில் சிறந்த
மனிதனை இழந்தோம்!

பெற்ற தாயைப்
போல தமிழை
காத்த எங்கள்
பெருமையை இழந்தோம்!
உண்மை யோடு
எழுத்தை ஆண்ட
உயர்ந்த மனித
நேயத்தை இழந்நோம்!

இருந்தும் தனது
புகழை மறைத்த
எங்கள் இதயப்பூவை
இழந்தோம்!
சொல்ல முடியா
சுவையாய் இருந்து
வெல்ல முடியா
தமிழைத் தந்தான்!
வேண்டும் போது
காட்டும் அன்பை
வேகமாக
எமக்குள் வைத்தான்!

இந்த வயதில்
இறப்பா உனக்கு?
இதயமே 
நின்று போக
துயராய் வந்த
செய்தி கேட்டு
துடித்துத் துடித்து
நாங்கள் இறந்தோம்!

போய் வா என்று
விடையைத் தர
முடியா நிலையில்
நாங்கள் உள்ளோம்! 
நன்றி மட்டும் 
சொல்லி உனது
நாமம் வாழ
உன்னை நினைப்போம்! அன்புடன் இழவாலை அன்ரன் யூட்.

    ReplyDelete
  7. மறக்க முடியாத நல்ல மனிதர். இலக்கிய தரத்தை சினிமா பாடல்களிலும் கொண்டுவந்த அற்புத கவிஞர். அவரின் மறைவு தமிழுக்கு பெரும் இழப்பே.!
    த ம 4

    ReplyDelete
  8. வேதனை அய்யா..

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...