Thursday, October 27, 2016

இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன் இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்


இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன்
இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்
பனிக்கின்ற கண்களுடன் கண்ணீர் சிந்த-நாட்டில்
பாராது கண்துயிலும் அரசோ! இந்த-நிலையில்
கனியிருக்க காய்தேடும் கயமை போன்றே—சற்றும்
கலங்காமல் தேர்தலிலே கருத்தை ஊன்ற-கண்டு
நனிதுயரில் வாடுபவன் பாடம் தருவான்-நாளை
நடப்பதை எண்ணிடுவீர் ! துயரம் மறவான்!


புலவர் சா இராமாநுசம்

4 comments :

  1. அரசு மறக்கின்றதோ இல்லையோ... நாளை மக்கள் மறந்து விடுவார்கள் ஐயா.
    த.ம 2

    ReplyDelete
  2. இரண்டாண்டு பாக்கியாம் ,அதுவும் 52 கோடி ரூபாயாம் !சர்க்கரை ஆலை முதலாளிகள் விவசாயிகள் வயிற்றில் அடிப்பது முறையன்று !

    ReplyDelete
  3. நம் மக்களின் மறதி ஒன்றே அரசியல்வாதிகளுக்கு பெரும்பலம் ஐயா! இதே அரசியல்வாதிகளுக்கு கரும்பு விவசாயிகளும் துயரை மறந்து தேர்தலின்போது வாக்களிப்பார்கள். என் செய்ய.

    ReplyDelete
  4. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...