Friday, October 21, 2016

அளவின்றி வாழ்த்துகளை அளித்தீர் நீங்கள்-நானும் அகமோடு முகம்மலர ஏற்றேன்! உங்கள்



அளவின்றி வாழ்த்துகளை அளித்தீர் நீங்கள்-நானும்
அகமோடு முகம்மலர ஏற்றேன்! உங்கள்
உளமகிழ என்நன்றி மலரை ஏற்பீர்- பொங்கும்
உணர்வுகளை உரைத்திடவே இயலா! காப்பீர்!
வளம்திகழ வாழ்வாங்கு வாழும் வரையில்-ஐயன்
வள்ளுவனின் சொற்படியே முடிந்தவரையில்
நலம்திகழ நடந்திடுவேன் உறுதி! உறவே-மீண்டும்
நவில்கின்றேன் நன்றியென ! அறியேன் கறவே!


புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. இந்த நன்றிக்கவிதை எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் , காலத்தால் வென்று நிற்கும் போலிருக்கே :)

    ReplyDelete
  2. ஐயன் வள்ளுவன் காட்டிய வழியில் எந்நாளும் வாழ்பவர் அல்லவா தாங்கள்
    தங்களின் வழி காட்டுதல் எம் போன்றோர்க்கு என்றுமே தேவை ஐயா
    நன்றி

    ReplyDelete
  3. நன்றிக்கவி நன்று ஐயா வாழ்க நலம்

    ReplyDelete
  4. எங்களின் வாழ்த்துக்கு நன்றி சொல்லத் தெவையில்லை ஐயா!அது எங்கள் பாக்யம்!

    ReplyDelete
  5. தங்களை வாழ்த்துவது
    எமது பணி

    ReplyDelete
  6. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...