Showing posts with label முகநூல் பதிவுகள். Show all posts
Showing posts with label முகநூல் பதிவுகள். Show all posts

Friday, January 12, 2018

முகநூல் பதிவுகள்



12-ம் தேதியே அதாவது நாளை யே விடுமுறை என்பதை முன் கூட்டியே அறிவித்திருந்தால்
ஊர் செல்ல இருக்கின்ற மக்கள் பயணச்சீட்டை அதற்கேற்ப பதிவு செய்திருப்பார்கள்!எதிலும் திட்ட மில்லாத அரசே இன்று நடைப் பெற்றுக் கொண்டடிருக்கிறது!!! என்று மக்கள் புலம்புவது
தீருமா!?

மீண்டும் பேச்சு வார்த்தைக்கு
அழைத்தால் வேலைநிறுத்தம்
இரவே திரும்பப் பெறுவோம்- ஊழியர் சங்கம் அறிவிப்பு! ஆளும் அரசு ஆவன செய்ய வேண்டும்!

ஒருவனுக்குத் தேவைக்குமேல் பணம் சேர்ந்து விட்டால்போதும், மேலும் பணத்தை அவன் தேடாமலேயே அப் பணமே நாளும் பணத்தைத்
தேடித் தரும்!

உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் ! என்பதிவைப்
படிக்கின்ற யாரும் மறுமொழியை ஆங்கிலத்திலத்தில்
போட வேண்டாம் என மெத்தப் பணிவன்போடு வேண்டுகிறேன் மன்னிக்க!

பொங்கல் விழா நெருங்குகிறது
போக்கு வரத்துத்து தொழிலாளர் பிரச்சினையை விரைந்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள்! மக்களின் அச்சத்தை , தவிப்பைப் போக்க இருதரப்பும் முயல வேண்டும்

உரிமைக்குக் கூட இல்லை உழைத்த உழைப்புக்கு உரிய
ஊதியமும் ஓய்வுபெற்றோர்
ஊதியமும் முறையாக வழங்கப்பட வில்லை என்றால் போராடத்தானே செய்வார்கள் அதனை
நீதி மன்றங்கள் மூலம் தடை செய்வதும் பணிநீக்கம்
செய்வோம் என்று மிரட்டுவதும் மக்களாட்சியா!!

தீதும் நன்மையும் நமக்கு பிறரால் வருவதல்ல அதற்குக் காரணம் நாமேதான்! மேலும் அதனால்
நோவதும் விடு படுவதும் அதுபோன்றதே!

நடிகர் இரஜினி அவர்கள் ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு பலமான அடித்தளம் அமைக்க கால அவகாசம் கொடுத்து
முயல்வது பாராட்டத் தக்கதே அதனால்தான் முறைப்படி இன்னும் (ஏறத்தாழ) மூன்றாண்டுகள் கழித்து வரும் சட்ட மன்றத் தேர்தலில் மட்டுமே போட்டி என்று அறிவித்தார் சரி ஒருவேளை ஆளும்
ஆட்சி கலைந்து தேர்தல் முன் கூட்டியே வருமானால்
என்ன செய்வார் போட்டி!!!!! இடுவாரா?

புலவர்  சா  இராமாநுசம்

Monday, November 20, 2017

முகநூல் பதிவுகள்



யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே! இது பழமொழி! அதுபோலத் தான் தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடக்கிறது ,இதிலே என்ன வியப்பு இருக்கிறது ஒத்திகை தானே

உறவுகளே!
வள்ளுவர் கூட பொய் சொல்ல லாம் என்று சொல்கிறாரே! உண்மைதான்! ஆனால், எப்பொழுது
என்றால், ஒருவன் தான் சொல்லும் பொய்யானது யாருக்கும் தீமை தராதவகையில் பெரும் நன்மையை தரும் என்றால் தவறல்ல! என்பதே மேலும் அதாவது உண்மை ஆகாது,!ஆனால் அதனை உண்மையின் இடத்தில் வைத்து ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்

ராஜீவ் கொலைவழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரே கருணை காட்டுமாறு
சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தை ,கண்டு மனித நேயத்தோடு,சோனியா அவ ர்கள் மன்னிக் வேண்டுகிறோம்

உறவுகளே
தேசபிதா என்று மக்களால் போற்றப் பட்ட அண்ணல் மகாத்மா காந்தி அவர்களைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டுவதாக, வந்துள்ள செய்தி உண்மை என்றால், இந்த நாடு
எங்கே போகிறது! ஆளும் மத்திய அரசு இதனை
தடுத்து நிறுத்த வேண்டாமா!!!!?

ஆளுநரின் செயல் வரம்பு மீறியதாக இருந்தாலும் ஆளும்
அரசோ அமைதியாக இருப்பதும், அமைச்சரே ஒருவர் அதில் கலந்து கொள்வதும் சனநாயகத்தில் கேலிக் கூத்தாகும் ! இது, மத்திய அரசுக்கு அழகல்ல! இதைவிட ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்துவது நன்று

ஒருவன் சூழ்நிலையின் காரணமாக படிக்க முடியாமல் போனாலும்
நன்கு கற்றவர்களால் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு , அறிவு
பெறுவதே போதுமானதாகும்! அதுவே தளர்ச்சி யுற்ற காலத்தில் ஊன்றுகோல் போல அவனுக்குப் பயன் படும் என்பதாம்!

உறவுகளே!
திருப்பதிக்குச் சென்று மொட்டையைக் கண்டாயா
என்று கேட்பதற்கும், செயலலிதாவின் மர்ம மரணத்தை விசாரிக்க நீதிபதி ஒருவரை நியமித்து இருப்பதற்கும் பலன் என்னமோ ஒன்றுதான்!

புலவர் சா  இராமாநுசம்

Sunday, October 22, 2017

முகநூல் பதிவுகள்

பிறவிக் குருடன் அப்படியே வாழ்ந்து விட்டால் அதிக துயரமில்லை!பழகி விடும்
ஆனால், அவன் பார்வைப் பெற்று சிலகாலம் உலகைப்
பார்த்து மகிழ்ந்த நிலையில் மீண்டும் பார்வையை
இழந்து விட்டால் ,அவன் பெருகின்ற துன்பத்திற்கு அளவே இல்லை! அதுபோலவே வாழ்க்கையில் நாமக்கு வரும் சில நிகழ்வுகள் இஅமைந்நு விடுகின்றன!

நடுத்தர மக்கள் வாழும் இடங்களில் கேட்கும் பட்டாசு வெடிக்கும் சத்தம் இந்த ஆண்டு மிக மி்க க் குறைவு காரணம்
பீன்ஸ் விலைமட்டுமே கிலோ முன்னுறு(300) என்றால்
பட்டாசா வெடிக்கும் உள்ளம்தான் வெடிக்கும்

உறவுகளே!
மீன் குட்டிக்கி நீந்தக் கற்றுத்தர வேண்டுமா ? என்று
கேட்கும் மனிதன்தானே தன் குழந்தை நடக்க நடைவண்டி சொய்துத் தருகிறான் !இப்படிதான் வாழ்கையில் சிலர் ,சிலநேரங்களில் பிறருக்கு ஒதிவிட்டு தமக்கு வரும் போது அதனை மாற்றிக் கொள்வார்கள்

குளத்திலே நீரின் அளவு உயர உயர அக் குளத்தில் உள்ள நீராம்பலும் தாமரையும் அதோடு உயரும்! அது
போல ஒருவனது அறிவும் , அவன் கற்ற நூலுக்கு ஏற்ப
உயரும் என்பதாம்

ஒரு பழமொழி சொல்வாங்க!
கம்புக்கு களை வெட்டனாமாதிரி, தம்பிக்கு பொண்ணுபாத்தமாதிரி ன்னு சில செய்திகளை கிராமத்திலே விமர்ச்சிப்பாங்க அதுபோல சன் டிவி
விநாயகர் தொடரில் போட்டிகளை தினகரன் செய்தித்
தாளோடு இணைத்து அதன் விற்பனையை அதிகரிக்க
ஆவன செய்துள்ள பத்திசாலி தனத்தை பாராட்டத்தான்
வேண்டும்!வேறென்ன சொல்ல


தம்பி , விஜய் டிவியிலே வந்தா
அண்ணன் , சன்டிவியிலே வருகிறார்! போட்டி அண்ணன்
தம்பிக்கு இடையேவா!அல்லது டிவிகளுக்கு
இடையாவா! எல்லாம் பணம் படுத்தும் பாடு!
ஆண்டவனையும் விட்டுவைக்க வில்லை


மைய, மாநில அரசுகள் , திட்டங்கள் தீட்டுவது நாட்டு
மக்களின் நன்மைக்கே என்பது தவறல்ல ! ஆனால் , அத்திட்டங்கள் நடைமுறையில் வெற்றியின்றி தோல்வி அடையுமானால் அதனை மாற்றிக் கொள்வதும் தவறல்ல ! அதனைஏதோ தங்கள் மானப் பிரச்சனை யா்க எண்ணுவது தான் தவறாகும் 


 

Friday, July 21, 2017

முகநூல் பதிவுகள்!



சில நேரங்ளில் நூலை இயற்றியவரின் கருத்துக்கு உரையாசியர் கருத்துக்கான விளக்கம் நூலுக்கு
மேலும் சிறப்பளிக்கும்
வள்ளுவர் , படிக்காதவன் நுட்பமான கருத்தைக் கூறினாலும் படித்தவர் ஏற்றுக் கொள்ளார் என்பார்
இதற்கு உரையாசிர்(பரிமேலழகர்) கூறும் எடுத்துக் காட்டு ஏரல் எழுத்து போல, அதாவது, கடற்கரையிலகள் நண்டுகள் முன்னும் பின்னும்செல்ல ஏற்படும் வரிகள் உற்று பார்த்தால் அ போலவும் உ போலவும் தெரியும் அதனால் நண்டுகளுக்கு அ எழுத தெரியும் எவரும் சொல்லார்
என்பர்!சரிதானே!

பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பார்கள்! என்றால் பரப்பனஅக்ராகார சிறையில் பாயாதா! வரும் தேர்தலில் கர்நாடக முதல்வருக்கு சிக்கல்தான்

உறவுகளே!
உலகத்தைக் காட்டிலும் மிகவும் பெரியது - எது?
காலமறிந்து செய்த உதவிதான் -அது


அள்ளாம குறையாது இல்லாம வாராது என்பார்கள்
தற்போது பரப்பன அக்காரா சிறை பற்றிய
சின்னமாவின் சொகுசு வாழ்க்கை இரகசியம் அம்பலமாகத் தொடங்கிவிட்டது! விரைவில்
முழுதும் அம்பலமாகும்!
!

Monday, November 14, 2016

முகநூல் பதிவுகள்!

தமிழக மக்களின் நலன் கருதி ,நம் முதல்வர் அவர்கள் மிகவும்
கடுமையாக எதிர்த்து வந்த தீங்கான பல திட்டங்கள் ஒவ்வொன்றாக
ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வருவதைக்காணும் போது தமிழ்
நாட்டை தற்போது ஆள்வது பெரும்பான்மை அண்ணா திமுகா
அரசா?????? அல்லது !!!!!!வேறா ! ஐயம், எனக்கு வருகிறது
உங்களுக்கு!!!!??


உறவுகளே !
பொதுவாக மருத்துவ மனையில் , நோயாளி
சேர்க்கப் பட்டு குணமானால் மருத்துவர் தான்
அவர் வீடுதிரும்புவது(டிஸ்சார்சு)பற்றி அறிவிப்பார் ஆனால்
, நம் முதல்வர் வீடு திரும்புவதை அவர்தான் அறிவிப்பார்
என்று,அப்பல்லோ மருத்துமனை ,அதன் தலைவர் சொல்வது!!!!
சரியா?


ஆயிரம் ஐநூறு நோட்டுகள் செல்லாது என்று அரசு சொன்னதால் தங்கநகை
விற்பனைநேற்று இரவு முடிந்து விடிந்தும் நடந்து கொண்டிருகிறேதே நகைக் கடைகளில்
இப்படி கருப்பு பணம் வெள்ளை யாகிறதே அரசு என்ன செய்கிறது
செய்யப் போகிறது !!? முன் யோசனை வேண்டாமா!!


ஐயா ஓர் ஐயம்!
நோட்டுகள் செல்லாதென சொன்னது , சரி! வரவேற்போம்! பதிலாக வரும் புதிய நோட்டுகள், ஐநூறு
ஆயிரம் என்று வந்தால் தானே முறையாக இருக்கும் அது
என்ன இரண்டாயிரம் என்ற கணக்கு!!? இதில் ஏதேனும்
மர்மம் இருக்குமோ?


பசி வந்தா பத்தும் பறக்கும் என்பார்களே அவை என்ன! கீழே ----
மானம், குடிபிறப்பு ,கல்வி,ஈகை,அறிவுடமை,பதவி,தவம்,உயர்வு,
தொழில்முயற்சி, காதல் என்பனவாம்!


திருமிகு இராகுல் காந்தி அவர்கள்
வங்கியில் வரிசையில் நின்று செல்லாத நோட்டை மாற்றினார்
இது, செய்தி!
ஆகா! என்ன எளிமை! ஒரு பழமையான தேசியக் கட்சியின்
எதிர்காலத் தலைவர் மக்களோடு தானும் ஒருவராக நின்று ,(செலவிற்கு பணமில்லாமல்) நோட்டை மாற்றிக் கொண்டது
கண்டு நாடே பாராட்டுகிறது! இது ஒன்றே இவரது அரசியல் முதிர்ச்சிக்கு , எடுத்துக் காட்டு! இதற்கு மேலும் நான் விளக்க
வேண்டுமா! கடவுளே மக்களை நீதான் காப்பாற்ற வேண்டும்!


ஒருவன் சூழ்நிலையின் காரணமாக படிக்க முடியாமல் போனாலும்
நன்கு கற்றவர்களால் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு , அறிவு
பெறுவதே போதுமானதாகும்! அதுவே தளர்ச்சி யுற்ற காலத்தில் ஊன்றுகோல் போல அவனுக்குப் பயன் படும் என்பதாம்!


புலவர்  சா  இராமாநுசம்  

Wednesday, September 21, 2016

முகநூல் பதிவுகள்!


ஆற்றின் நீர் வற்றி நடப்பவர் பாதங்களை சுடுகிள்ற அளவுக்கு
வெயில் காய்ந்தாலும் மணலை தோண்டினால் நீர் சுரக்கும் என்பது
தற்போது பொருந்தாது! காரணம்? ஆற்றில் மணல் இருந்தால் தானே!
அதைத்தான் அரசியல் வாதிகளும் மணற் கொள்ளையரும் முற்றிலும்
சுரண்டி எடுத்து விட்டார்களே!

கொத்துக் கொத்தாக மலர்ந்தாலும் மணமில்லா த மலரைப்போல,
எவ்வளவுதான் நூல்களைக் கற்றிருந்தாலும், அதனைப் பிறருக்கு
எடுத்துச் சொல்ல இயலதவன், கற்றவனாக , கருதப்பட மாட்டான்!
என்பதாம்!

உறவுகளே
மிகச் சிறிய கூழங்கல்லானாலும் தண்ணீரில் விழுந்தால்
நேராக தரைக்கு சென்று அமையாகி விடுகிறது! ஆனால், எவ்வளவு
பெரிய தக்கையானாலும் மேலும், மேலும் நீர் வந்தாலும் மிதக்கவே
செய்கிறது! அதுபோல, நம்,நம்முடைய வாழ்க்கையில், இன்பம் வரும்போது ,கல்லாக ,அமதியாக அடக்கத்தோடு மகிழ்ந்தும்,துன்பம் வரும்போது துடிதுப் போகாமல் மூழ்காத தக்கைபோல தாங்கிக்
கொண்டும் வாழப் பழக வேண்டும்!


சமீபத்தில் ஒரு பதிவினைப் படித்தேன்!
வானம் பெய்து மழை நீர் வெள்ளமாக ஓடி கடலில் கலக்கா
விட்டால் பெரிய கடலும் தன்னுடைய வளத்தை இழந்து விடுமாம்!
என சொல்வதாக! இதைத்தான் வள்ளுவர் பெருமானும் வான் சிறப்பு அதிகாரத்தில் வெகு அழகா
நெடுங் கடலும் தன் தன்னுடைய நீர்மைகுன்றும் என்பதை அன்றே சொன்னார்! நம் முன்னோர் அறிவியலை எவ்வளவுதூரம் அறிதுள்ளார் !என்பது மிகவும் வியக்க தக்கதல்லா!


அளவுக்கு மீறிய சொத்து சேர்க்கும் அரசியல் வாதிகளின் ஆசையே
ஊழலுக்கு காரணமாகும் !ஊழல் குற்றச் சாட்டில் வழக்கு பதிவு செய்யப் பாட்டலே போதும் ,அவர்கள் நிரந்தரமாக.அதன் பின்
வாழ்நாள் முழுதும் ,தேர்தலில் நிற்க முடியாது என நிரந்தர தடை
ஏற்பட்டாலே ,அதன் மூலம் பயம் வந்து பெருமளவு ஊழல்
குறைந்து நேர்மையான அரசியல் வாதிகள் பொது வாழ்வுக்கு
வருவார்கள்! செய்வார்களா?


நெருப்பும் நீரும் ஒன்றாக இருக்க முடியாது! நீர் பட்டாலே நெருப்பு
அணைந்து விடும்!ஆனால் நீரால் உருவாகி, நீரை தன்னகத்தே கொண்டுள்ள மேகம் மழையைப் பெய்ய முனையும் போது ஒன்றுடன் , ஒன்று மோத , தோன்றும் மின்னலும் இடியும் நெருப்புதானே! இது, விந்தையாக உள்ளது அல்லவா!


உறவுகளே!
இன்றைய சமுதாயத்தில் நாம் எப்படி வாழ்ந்தால் தக்குப்
பிடிக்க முடியும்! எண்ணிப் பார்த்தால்,தண்ணீரில் வாழும் மீனாக
இருந்தால் ,இயலாது! தரையில் விழுந்தால் வாழ்வு முடிந்து விடும்!
எனவே, தண்ணீரிலும் வாழ்ந்து தரையிலும் வாழுகின்ற தவளையை
போல ,நம்மை, நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்! அப்படி இருந்தால்
தான் ஒரளவாவது நாம் அமைதியாக வாழ முடியும்!


புலவர்  சா  இராமாநுசம்   

Friday, September 9, 2016

முகநூல் பதிவுகள்!


உறவுகளே!
சுவை மிகுந்த பழங்கள் தோட்டத்தில் இருந்தாலும் காக்கைகள், பழுத்த வேப்பழத்தையே விரும்பி உண்ணும் அது
போல ஒருவரிடம் நல்ல குணங்கள் பல இருந்தாலும் , வீணர்கள்
சிலர் அவரிடம் உள்ள இரண்டொரு தீய குணத்தையேப் பெரிது
படித்து கூறுவர்!

கோள் சொல்வதே வழக்கமாக கொண்டவனிடம் சொல்லும்
செய்தியானது, காற்றொடு கலந்த நெருப்புமாதிரி மிவும் வேகமாக
பரவும்! ஐயமில்லை!

உறவுகளே!
கண்கள் இரண்டாக இருந்தாலும் அவை இணைந்து ஒரேப்
பொருளைப் பார்ப்பது போல கணவன் மனைவி என இருவரும்
எண்ணுவதும்,செய்வதும் ஒன்றாகவே அமையுமானால், அக் குடும்பம் இனியதாக அமையும்

கல்லால் ஆன தூண் பாரம் அதிகமானால் , உடைந்து நொறுங்குமே
தவிர வளைந்து கொடுக்காது! அதுபோல மானமுள்ளோர், மானக்கேடு வரும்போது உயிரை விட்டாவது மானத்தைக் காப்பார்

கல்லாத மக்களுக்கு , கற்றுணர்ந்தார் சொற்களும், அறவழி செல்லார்க்கு அறமும் , வாழைக்கு தான் ,ஈன்ற கனியும் , கணவனுக்கு
இசைந்து ஒழுகாத மனைவியும் கூற்றுவனாக(எமன்) ஆவார்கள்

உறவுகளேடு
பழமொழிகள்!நம் முன்னோர்கள் காலம் தொட்டு, வழி வழியாக
வழங்கி வருபவை பலவாகும்! அவைகள் நேரடியாக பொருள் தருவது ஒன்றானாலும் வேறொன்றை சுட்டுவதே உண்மை! ஒரு நிகழ்வு நடை பெற்று,முழுதும் வெளிப் படாவிட்டலும்,கொஞ்சம்
வெளி வந்தாலும் அது மறைக்கப் படும் போது இப்படி சொல்வதுண்டு
நெருப்பு இல்லாமல் புகையாது, அள்ளாம குறையாது என்று
சொல்வார்கள் !இல்லையா!


புலவர்  சா  இராமாநுசம் 

Tuesday, September 6, 2016

முகநூல் பதிவுகள்!


மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா ! என்று கேட்கும்
மனிதன் தானே, தன் மகன் நடைபழக நடைவண்டி செய்து தருகிறான்! இதனை என்ன வென்று சொல்வது!

உறவுகளே!
ஏதோ ஒரு பிள்ளைத் தமிழ் நூல் !பாடிய புலவனின் கற்பனையைப் பாருங்கள்!
நீர்நிறைந்த குளம்! அதிலிருந்த வாளை மீன் துள்ளி பக்கத்தில்
இருந்த தென்னை மரத்தின் தேங்காய் குலையில் மோத அதிலிருந்த
தேங்காய் ஒன்று தெறித்து போய் தேவருலகில் உள்ள கற்பக மரத்தில்
மோத, மரம் குலுங்கி தன்னிடம் உள்ள தேனை மழை போலப்
பொழிய, அவை பூ உலகில் உள்ள ஊரின் தெரு வெங்கும் ஆறாக ஓடின, என்பதாம்---இவ்வாறு பாடுவது உயர்வு நவிற்சி அணி
ஆகும்


பசித்துப் புசி என்று ஒரு வரியில் சொன்னவன் எவ்வளவு அறிவாளி!
ஒருவன், வேளைதோறும் பசி எடுத்தபின் உண்டு வந்தால் நோயின்றி வாழலாம்! கால நேரம் காணாமல் கண்டதை எல்லாம் பசியின்று உண்பவன்தான், இன்று பல்வகை நோய்களுக்கு ஆளாகி
அல்லல் படுகின்றான்


ஊக்கமது கைவிடேல், என்று ஔவையார் சொன்னார்! அதாவது
உன் மனவலிமையைக் கைவிடாதே என்பதாம்! ஆனால நம்முடை
குடிமகன்களோ ஊக்கம் தருவது மதுவே என்றே பொருள்
கொண்டு குடித்துத் தள்ளுகிறார்கள்! வாழ்க குடியரசு!


பொன்னால் ஆகிய குடம் உடைந்தாலும் மீண்டும் பயன்படும்!
மண்ணால் ஆகிய குடம் உடைந்தால் எதற்கும் பயன் படாது
அதுபோல மேலாண குணமுடையோர் வறுமை அடைந்தாலும், பொன்போல
குணத்தில் மாற மாட்டார் ஆனால் கீழ்மை குணமுடையோர் வறுமை
வந்தால் மண்குடமாக மேலும் பயனற்றுப் போவர்


உடலில் பிற உறுப்புகள் நோயால் வருந்தும் போது, கண்கள் மட்டுமே அழுவது போல சான்றோர்கள் , பிறருக்கு வந்த துன்பங்களையும் தனக்கு வந்ததாகக் கருத்தி அனல் பட்ட நெய்யாக உருகி வருந்துவர்!

புலவர்  சா  இராமாநுசம் 

Friday, June 24, 2016

முகநூல் பதிவுகள் !

தென்னை மரத்தில் ஒருத்தன் ஏறி தேங்காய் பறிக்க முயல காவல்காரன் ஓடி வருவதைக் கண்டு அவசரமாக  இறங்கினான், காவல்காரன் கேட்டான் ! ஏண்டா மரத்திலே ஏறின ! திருடன் பதில் சொன்னான்! புல் பிடுங்க! என்றான் காவல்காரன், ஏண்டா தென்னை மரத்திலா புல்லிருக்கும் என்று கேட்க , இல்லை! அதான் இறங்கி வரேன்னு, திருடன் பதில் சொன்னான்! இது, எப்படி இருக்கு! இப்போ நாட்டு நடப்பைப் பார்த்தேன்! எழுதினேன்!


ஒரு குடும்பத்தலைவி , தங்கள் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்தும் இல்லத்திற்கு வரும் உறவினர்களை( தன் வழியும் கணவன் வழியும்) வரவேற்று வேறுபாடு காட்டாமல் விருத்தோம்பியும் கணவனோடு பெற்ற மக்களையும் பேணி பாதுகாத்து தினமும் இறைவனைத் தொழுபவளாக் இருக்க வேண்டும்

கடித்தது நாயா இருந்தால் கையில் கிடைத்ததை கொண்டு விரட்டி அடிக்கலாம்! கடித்தது செருப்பா இருந்தா ? என்ன செய்வது! இப்படித் தான் , நம் வாழ்கையிலும் பல செயல்கள் நடக்கின்றன! அவற்றுள் நாம் ஒரு சில வற்றுக்கு மட்டுமே எதிர் வினை செய்ய முடியும்! சிலவற்றுக் பொறுத்து அமைதி காக்கத் தான் வேண்டும்!

அறிஞர் அண்ணா அவர்கள் மாநில சபையில் பேசும்போது . மாண்பு மிகு பாரதப் பிரதமர் நேரு அவர்களிடம் , நீங்கள் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் போன்றவர், நானோ கெட்டிக் கிடக்கின்ற செங்கல்லைப் போன்றவன் , என்று, தன்னடக்கத்தோடு குறிப்பிட்டார்! இன்று அவர் பெயரைக் கொண்டும் ,கொள்கைவழி நின்றும் நடப்பதாகச் சொல்லும் ஆளும் கட்சியும் ,எதிர் கட்சியும் .குறைந்த அளவேனும் அவர் காட்டிய கண்ணியத்தை அவையில் கடை பிடித்து நடக்க, ஓட்டளித்த மக்கள் எதிர் பார்க்கிறார்கள்!!!?

கச்சத் தீவு பிரச்சனையில் இரு கட்சிகளும் வீண் விதண்டா வாதம் செய்து சட்டமன்ற நேரத்தைப் பாழாக்குவதில் எவ்வித பயனும் இல்லை !இனி , அதனைத் திரும்ப , பெறும் வாய்ப்பு மிகவும் குறைவே! உடன் ஆற்ற வேண்டிய பணி, மீனவரின் வாழ்வாதாரம் வளம்காண உரிய வழிதனை , என்ன வென ஆய்வதே உங்கள் இருவரின் செயலாக வேண்டும்! செய்வீர்களா!?

புலவர்  சா  இராமாநுசம்
 

Wednesday, June 22, 2016

முகநூல் பதிவுகள்!



உறவுகளே!
யார் குற்றவாளி !!?
நாள் பார்த்து மண்டபம் தேடி, முறைப்படி திருமணப்பதிவு செய்ய, பதிவு அலுவலகம் சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதும் தரவில்லை என்றால் அலைகழிக்க முயல்வது நடைமுறையாகவும் பதி செய்ய வந்தவர்களும், உடனே முடிக்க தாங்களே முன்வந்து இலஞ்சம் தருவதும் இன்றும் காணுகின்ற காட்சி ஆகும்
இந்த இருவரில் யார் குற்றவாளி?

உறவுகளே நல்ல நட்பு எப்படி இருக்கும்!!?
இடுப்பில் கட்டிய வேட்டி நழுவும்போது கை தானாகவே ஓடி அதனை நழுவாமல் பற்றிக் கொள்வதைப் போல, ஒருவன் தன்னுடைய நண்பனுக்குத் துன்பம் வரும்போது தானாகவே ஓடிச் சென்று உதவி துன்பத்தை நீக்குவதாக இருக்க வேண்டும்!

தேனை உண்ணத்தான் வண்டு பூ வைத்தேடி வருகிறது என்பது பூவுக்குத் தெரியாவிட்டாலும் கவலையில்லை! ஆனால் பூவையர்க்குத் தெரியாவிட்டால் ...! விளைவு விபரீதம் தானே!

உறவுகளே!
யார் குற்றவாளி !!?
நாள் பார்த்து மண்டபம் தேடி, முறைப்படி திருமணப்பதிவு செய்ய, பதிவு அலுவலகம் சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதும் தரவில்லை என்றால் அலைகழிக்க முயல்வது நடைமுறையாகவும் பதி செய்ய வந்தவர்களும், உடனே முடிக்க தாங்களே முன்வந்து இலஞ்சம் தருவதும் இன்றும் காணுகின்ற காட்சி ஆகும்
இந்த இருவரில் யார் குற்றவாளி?

வண்டியில் பயணம் போகிறோம் ! பாதையில் நான்கு வ ழி சந்திப்பு வருகிறது நடுவிலே ஒரு கம்பம் !அது நான்கு திசைகளையும் காட்டுவதோடு அவ் வழி எந்த ஊருக்குப் போகும் என்பதையும் காட்டுகிறது! நாம் எங்கே போக வேண்டுமோ அங்கே போக நாம்தானே முனைய வேண்டும் அதுபோல நம் வாழ்க்கைப் பாதையிலும் சிலபேர் கைகாட்டி மரமாகத்தான் இருப்பார்கள்! இருக்க முடியும்! எனவே நாம்தான் முடிவு செய்ய வேண்டும்

முதல்நாளே ஆரம்பமாகி விட்டதா அமளி !? சட்டமன்றத்தில் ! இனி வரும் ஐந்தாண்டுகளும் இப்படித்தான் போகுமா! கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுவதுதானே முறை! எதற்காக உறுப்பினர் திருமிகு செம்மலை அவர்கள் சமஸ்கிரதம் பற்றி தேவையில்லாமல் பேசி பிரசன்னையை உருவாக்க வேண்டும்!
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதனை கட்டுப் படுத்த கனிவோடு வேண்டுகிறேன்!

புலவர்  சா  இராமாநுசம்

Monday, March 28, 2016

முகநூல் பதிவுகள்




ஊழலை ஒழிக்க முடியுமா !? முடியும் என்று எனக்குத் தோன்ற வில்லை! கிணற்று நீரில் நஞ்சு கலந்து விட்டால் அதில் உள்ள நீரை அகற்றி விட்டால் போதும்! ஆனால் கிணற்றில் சுரக்கும் நீரே நஞ்சானால் என்ன செய்வது !? அதுபோலத்தான் இன்றைய நம் சமுதாயமும் அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் ஆனதோடு மக்களின் மனநிலையும் ,சுய நலத்தால் பிறர் செய்தால் ஊழல் அது தான் செய்தால் அல்ல என்று நினைக்கின்ற போக்காக மாறிவிட்ட தென்றால்!!! ஊழலை ஒழிக்க முடியுமா???? பதிலை நீங்கள் தான் சொல்ல வேண்டும்!


நெருஞ்சி முள் படர்ந்த தரையில் காலை வைந்தால் பாதம் முழுதும் முள் குத்ததானே செய்யும் !காலை மாற்றி மாற்றி , அங்கேயே வைத்தாலும் மீண்டும் அதே நிலைதானே!அதிலிருந்து விடுபட அவ்விடம் விட்டு வெளியே வருவது தானே புத்திசாலித் தனம்! அதுபோல நாம் வாழ்கையிலும் சில நிகழ்வுகள் வரும் ! அதுபோது அச் சூழ்நிலையில் இருந்து விலகி வருவதுதான், நமக்கு, நன்மை தரும்


உறவுகளே! வணக்கம்!
சொற்களைக் குறைவாக சொல்லி பொருளை விளங்க வைத்தலே செய்யுளுக்கு அழகு !அதுவாக இருக்க ஔவையார் ஏன் அறம்செய் ,என்று சொல்லாமல்,அறம் செய விரும்பு என்று சொல்ல வேண்டும் என்ற ஐயம் எழலாம் ! அறம் செய் என்பது ஏதோ கட்டளை இடுவது போல இருக்கும்! மேலும் ஏதோ சொன்னார்களே என்பதற்காக கட்டுப்பட்டு செய்வதாக அமையும் !தொடருமா என்பது ஐயமே! ஆனால் , அறம் செய அவனே விரும்புவதாக ஆகி விட்டால் அப் பணி தொடருமல்லவா! இதனை உணர்ந்தே அவ்வாறு மனோ தத்துவ அடிப்படையில் அன்படிக் கூறினார்


செய்தி!!!? ஒரு.....
மாணவன் பொதுத் தேர்வு எழுதிய முடித்த பின், வினாத்தாளைக் கொடுத்துவிட்டு ,விடைத்தாளை வீட்டுக்குக் கொண்டு போய் விட்டதாகவும் பிறகு விடைதாளை சரிபார்க்கும் போது, அடையாளம் கண்டு பிடித்து மாணவன் இல்லத்துக்கே சென்று வாங்கி வந்த தாகவும் வந்துள்ளது!! இது எவ்வளவு பெரிய அவக்கேடு!?
யாரை நோவது ? இன்றைய கல்வியின் தரத்தையா! மாணவன்
தரத்தையா ,மேற்பார்வை பார்த்தவரின் கவனக்குறையை யா? வெட்கப்படுகிறேன்! நானும் ஆசிரியனாக பணியாற்றிய காரணத்தால்

புலவர்  சா  இராமாநுசம்





Sunday, January 10, 2016

முகநூல் பதிவுகள்!





பாரதிதாசன் நடந்து போகும் வழியில் ஒரு குளம் தாமரைப் படர்ந்த , நீர் நிறைந்து காணப்பட்டது அது கண்ணைக் கவரவே அருகே சென்று கரையில்
நின்று , சலனமற்று தெளிந்த நீரை கவிஞர் எட்டிப் பார்தார் அவர் முகம் நீரில் தெரிந்தது! ஆகா கண்ணாடித் தரை என்றார்! உற்றுப் பார்த்தார் எங்கும் தாமரை இலைகள்! கண்கவர் பச்சை தட்டுகள்! என்றார் !மேலும் உற்றுப் பார்க்க , தாமரை இலைமீது முத்துப் போல் நீர் துளிகள் !எண்ணாத ஒளி முத்துகள் இறைத்தது போல என்றார்! கவிதை பிறந்தது!
கண்ணாடித் தரையின்மீது கண்கவர் பச்சைத் தட்டு! எண்ணாத ஒளி முத்துக்கள் இறைத்தது போல் குளத்தில்!

யாதும் ஊரே யாவரும் கேளீர்! என்ற வாக்கியம் அனைவரும் அறிந்த ஒன்றே! இதில் கேளீர்என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் சொல்கிறார்கள்
ஒன்று கேளீர் என்பது உறவினர் என்றும் மற்றொன்று கேளீர் என்பது சொல்வதைக் கேட்பீர்களாக என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறார்கள்
நீங்கள் எது சரி என நினைக்கிறீர்கள்!!?

எந்தக் குடியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அக் குடியில் பிறந்த மூத்தாவனாக இருந்தாலும் வயதில் இளையவனாக,இருந்து படித்து அறிவுள்ள ஒருவனையே ஊரும் மதிக்கும் , வரவேற்கும், போற்றும் என்பதுதான் உண்மை!

பையன் நல்லாப் படிக்கிறான் என்றால் பெற்றவர்கள் மகிழ்வார்கள் !பையன் நன்றாக. குடிக்கிறான் என்றால்!! மகிழவா செய்வார்கள்?

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...