நாளும் கைதே ஆகின்றான் –மீனவன்
நடப்பது எதுவும் புரியவில்லை
ஆளும் அரசோ தவறாமல்-கடிதம்
அனுப்புதல் ஏனோ தெரியவில்லை
மத்தியில் ஆள்வோர் இதுபற்றி-சற்றும்
மதிப்பதாய் எதுவும் தெரியவில்லை
கத்திமேல் நடக்கிறான் மீனவனோ-அவன்
கண்ணீர் நிற்குமா புரியவில்லை
புலவர் சா இராமாநுசம்

