Wednesday, March 1, 2017

பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்!


பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும்
புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்
பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும்
பதவிபட்டம் பணமென்றே கொள்கை நாட்டமே
உழுதுயிட்ட பயிரெல்லாம் சாவி ஆகவே-கண்ட
உழவனவன் வழியின்றி ஆவி போகவே
விழுதுவிட்டே வளர்கிறது ஊழல் மரமே-மக்கள்
வேதனையே படுவதுவா இறைவன் வரமே


புலவர் சா இராமாநுசம்

3 comments :

  1. ஆதாயமில்லாமல் அரசியல் கட்சிகள் தொடங்கப்படுவதில்லை

    ReplyDelete
  2. புதியன புகுதல் நன்று தானே ஐயா? பழையன ஒழிதல் தான் இயலாமல் இருக்கிறது...
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...