Tuesday, May 2, 2017

எதுவேண்டும் சொல்மனமே!-கேள்வி எழுந்திட அனுதினமே



எதுவேண்டும் சொல்மனமே!-கேள்வி
எழுந்திட அனுதினமே
மதிவேண்டும் என்றுள்ளமே-என்றும்
மாறாத நிலைவேண்டுமே
நிதிவேண்டும் வாழ்த்திடவே-அதுவும்
நேர்மையாய் வரவேண்டுமே
இதுவேண்டும் என்றெண்ணமே-பற்று
இல்லாது வாழவேண்டுமே


புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. உங்கள் அன்புதான் வேண்டும்

    ReplyDelete
  2. நல்ல மனம் வாழ்க.

    ReplyDelete
  3. நல்லதே வேண்டும்....ம்

    ReplyDelete
  4. எதுவும் வேண்டாம்
    என வேண்டுதல் கூட
    சரியோ எனப் படுகிறது

    ReplyDelete
  5. மிகவும் குறைவாக எழுதுகிறீர்களே தலைவரே! இரண்டு விருத்தங்களாவது எழுதலாமே! யோசியுங்கள். அடுத்த புத்தகம் போடுவதற்குப பக்கங்கள் வேண்டாமா?

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    நல்லதே நடக்கட்டும்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அருமை ஐயா நல்லது நடக்கட்டும்

    ReplyDelete
  8. அத்தனைக்கும் ஆசைப் படுன்னு ஞானிகளே சொல்ற காலம் அய்யா இது :)

    ReplyDelete
  9. நல்லதே வேண்டுவோம் ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...