Tuesday, January 30, 2018

ஆன்றோரே பெரியோரே வாருமய்யா –பதவி அடைவதற்குக் கூட்டணியா !? பாருமய்யா!



ஆன்றோரே பெரியோரே வாருமய்யா –பதவி
அடைவதற்குக் கூட்டணியா !? பாருமய்யா!
சான்றோரே நாள்தோறும் செய்திவருதே –அரசியல்
சாக்கடையா !? ஐயகோ! துயரம்தருதே!
கொள்கையென ஏதொன்றும் தெரியவில்லை-என்ன
கூட்டணியோ ! கடவுளே! புரியவில்லை!
எள்ளுகின்ற நிலைதானே முடிவில்வருமே-மக்கள்
எண்ணியிதை ஆய்தாலோர் விடிவுவருமே!


நேற்றுவரை பகைவராம்! காணயின்றே –அந்த
நினைவின்றி சேர்வதா நாணமின்றே!
போற்றுவதா!? இச்செயலும் எண்ணவேண்டும்-நாளும்
புலம்புவதால் தீராது திண்ணமீண்டும்!
தூற்றுவதும் மாற்றுவதும் வழக்கமாக-மெகாத்
தொடராக ஆற்றுவதும் பழக்கமாக!
சாற்றுவதா!? இக்கொடுமை ஆயவேண்டும் –உடன்
சரிசெய்த பின்பேநாம் ஓயவேண்டும் !

புலவர் சா இராமாநுசம்

4 comments :

  1. யாருக்கும் வெட்கமில்லை ஐயா
    முதலில் மக்களுக்கு வெட்கம் வரவேண்டும்.

    ReplyDelete
  2. எந்த செயலும் காரணமின்றி நடைபெறுவதில்லை

    ReplyDelete
  3. பணத்துக்கும் பதவிக்கும்தான் எப்போதுமே கூட்டணி.

    ReplyDelete
  4. அரசியல் கவிதை.. எனக்கு எதுவும் புரியவில்லை..

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...